மேலும் அறிய

Drugs Seized : மெகா கடத்தல்...1200 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள்...சிக்கிய ஆப்கானிஸ்தானியர்கள்

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகளை கைது செய்துள்ளது. 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள 312.5 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 10 கிலோ தூய்மையான ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், டெல்லியில் உள்ள கலிந்தி குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மீத்தாபூர் சாலையில் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இயங்கி வரும் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் பெரும் சரக்கு டெல்லிக்கு கடத்தப்படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் முஸ்தபா ஸ்டானிக்சா (வயது 23) மற்றும் ரஹிமுல்லா ரஹீம் (வயது 44) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். டெல்லி சிறப்பு பிரிவின் காவல் ஆணையர் ஹர்கோபிந்தர் சிங் தலிவால் இதுகுறித்து கூறுகையில், "துணை காவல் ஆணையர் லலித் மோகன் நேகி மற்றும் ஹிருதய பூஷன் தலைமையிலான குழு, ஆய்வாளர்கள் வினோத் குமார் படோலா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் எஸ்ஐக்கள் சுந்தர் கெளதம் மற்றும் யஷ்பால் சிங் ஆகியோரின் உதவியுடன், டிசிபி/சிறப்புப் பிரிவு (என்டிஆர்) ஸ்ரீ பி எஸ் குஷ்வாவின் தீவிர மேற்பார்வையில், இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதன் மூலம் நாடு கடந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளோம். 

கைது செய்யப்பட்டதன் மூலம், 10 கிலோ ஆப்கானிஸ்தான் பூர்வீக ஹெராயின் தவிர, 312.5 கிலோகிராம் உயர்தர பார்ட்டி போதைப்பொருளான மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான EU4 கண்காணிப்பு போதைப் பொருள் திட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அந்நாட்டின் மத்திய மகைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ephedra தாவிரங்கள் வேகமாக வளர்ந்து வருவதை உணர்ந்து வருகின்றனர். இந்த தாவிரத்திலிருந்துதான் மெத்தம்பேட்டமைன் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, புலனாய்வு அமைப்புகளிலிருந்து குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஹெராயினுக்கு மாற்றாக மெத்தாம்பேட்டமைன் விற்பனையின் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையின்படி, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த போதைப் பொருள் கடத்தல் குழு தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget