மேலும் அறிய

Bank holidays: வங்கிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை.. இந்த மாதம் எந்தெந்த நாட்களில் தெரியுமா?

காந்திஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி தற்போது தீபாவளி என தொடர்ச்சியாக பொது விடுமுறைகள் நிரம்பிய மாதமாக அக்டோபர் திகழ்கிறது.  

நாடு முழுவதும் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில், "நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் செயல்படாது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம். 

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளையும், சேவைகளையும் பெற திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட விடுமுறை பட்டியல் பின்வருமாறு:

அக்டோபர் 24ம் தேதி 
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலம், காங்டாக்கில் மட்டும் தீபாவளி அன்றும் வங்கிகள் இயங்கும்.

அக்டோபர் 25ம் தேதி
காங்டாக், மணிப்பூர் மாநிலம், இம்பால், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு இன்று விடுமுறை தினமாகும். இன்று அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். பிற பிராந்திய அலுவலகங்களில் வங்கிகள் இன்று திறந்திருக்கும்.

அக்டோபர் 26
அகமதாபாத், பெலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் நாளை விடுமுறையாகும்.

அக்டோபர் 27
காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் அக்டோபர் 27ம் தேதி வங்கிகள் முடப்பட்டுவிடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி தற்போது தீபாவளி என தொடர்ச்சியாக பொது விடுமுறைகள் நிரம்பிய மாதமாக அக்டோபர் திகழ்கிறது.  

நவம்பர் மாதத்தில் பொது விடுமுறை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு விடுமுறை

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 25ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் 25ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு மறுநாள் வரையறுக்கப்பட்ட விடுமுறை ( Restricted Holiday) தினத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக விடுமுறை விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget