மேலும் அறிய

இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?

ஒருவர் இறந்தபின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவர் இறந்த பின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஒருவர் இறந்த பின், அவரது இறப்பு குறித்து வங்கிக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது குழந்தைகள் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுத்துக் கொண்டு, பிறகு வங்கியிடம்  அவரது இறப்பு குறித்து தகவலைத் தந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும். மேலும், சட்டப்பூர்வமான வாரிசு யார் என்ற மோதலுக்கும் இது வித்திட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுப்பது என்பது வங்கியையும், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளையும் ஏமாற்றுவதற்குச் சமமாகக் கருதப்படும். இப்படியான நிலை ஏற்படுமானால், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?

இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பிறர் பயன்படுத்தினால், அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையில் யாராவது ஒருவர் பணம் முழுவதுமாக எடுத்துக் கொண்டால், மற்றொரு வாரிசு இதுகுறித்து புகார் அளிக்கலாம். இதற்காக வங்கிக் கணக்கு விவரங்கள், முடிந்தால் சிசிடிவி வீடியோ காட்சிகள், வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் இறப்புச் சான்றிதழ், பணம் வெளியில் எடுக்கப்பட்ட போது யாரிடம் ஏடிஎம் கார்ட் இருந்தது என்பதற்கான சான்று முதலானவற்றை வைத்து காவல்துறையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கொடுக்கப்படும் புகாருக்கு ஏற்ப, இந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் வழங்கப்படும். 

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவர் சேமித்த பணத்தைச் சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளும் விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதற்காக இறந்தவர் தனிக்கணக்கு வைத்திருந்தாரா அல்லது இன்னொருவருடன் இணைந்து கூட்டாக வங்கிக் கணக்கு வைத்திருந்தாரா என்று சரிபார்க்கப்படும். மேலும், வங்கிக் கணக்கு வைத்திருந்தவர் தனது மறைவுக்குப் பிறகு பணம் யாருக்குச் செல்ல வேண்டும் என்று நியமிக்கப்பட்டோர் குறித்த சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று வங்கியின் தரப்பில் சரிபார்க்கப்படும். இந்தக் காரணத்திற்காகவே, எதிர்பாராத விதமாக நிகழும் மரணங்களின் காரணமாக, குடும்ப உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?

இதன்பிறகு, வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் மறைவு குறித்து வங்கிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வடிவில் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் இறப்புச் சான்றிதழின் நகல், அவரின் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் வங்கிக்குச் சமர்பிக்க வேண்டும். 

நாமினேஷன் செய்யாமல் கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருப்போரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் அந்த வங்கிக் கணக்கைத் தொடர விரும்பினாலும், இதே வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget