EPFO 3.0 Launch: சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
EPFO 3.0 Update: EPFO 3.0-ன் கீழ், PF பணம் எடுப்பது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அமைப்பு, ஊழியர்கள் தங்கள் PF நிதியை UPI மற்றும் ATM-கள் மூலம் விரைவில் எடுக்க அனுமதிக்கும்.

PF Withdrawal Rules: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் செய்திகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) பணத்தை எடுப்பது இனி சுலபமாக மாறும். தற்போது, பணம் எடுக்க ஆன்லைன் மூலம் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது. ஆனால், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் முறையில் விரைவில் மாற்றங்கள் வரவிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா.?
நிறுவனம், ஊழியரின் சம்பளத்திலிருந்து பிஎஃப் நிதியை பிடித்தம் செய்து, அதனை அவர்களின் PF கணக்கில் செலுத்துகிறது. ஊழியர் தேவைப்பட்டாலோ அல்லது வேலையை விட்டு விலகிய பிறகோ இந்த தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது, புதிய EPFO அமைப்பின் கீழ், UPI மற்றும் ATM மூலம் பிஎஃப் நிதியை திரும்பப் பெறும் வசதி செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO 3.0-ல் என்னென்ன வசதிகள்.?
EPFO 3.0-ன் அறிமுகம் உங்களுக்கு பல நன்மைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மிக முக்கியமான மாற்றம், UPI மற்றும் ATM-கள் மூலம் PF நிதிகளை எளிதாக பெற முடிவதே ஆகும். இது, ஆன்லைனில் PF நிதிகளை பெறுவதில் உள்ள சிரமங்களையும், நீண்ட காத்திருப்பு நேரங்களையும் கணிசமாக குறைக்கும். இதன்மூலம், தனிநபர்கள் PF நிதிகளை பெறும் செயல்முறை வேகமாகவும், எளிதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயல்முறை எப்போது தொடங்கப்படும்.?
கிடைத்த தகவல்களின்படி, EPFO 3.O-வின் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அது இந்த ஜூன் மாதம் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய அமைப்புமுறை செயல்படுத்தப்பட்டவுடன், EPFO இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலம் உங்கள் கணக்குத் தகவல்களை நீங்கள் அணுக முடியும். அதில் இரண்டு வகையான இருப்புகளை காண்பீர்கள்: ஒன்று நீங்கள் எடுக்கக்கூடிய தொகைக்கானது, மற்றொன்று உங்கள் PF கணக்கில் நீங்கள் பராமரிக்க வேண்டிய தொகைக்கானது.
PF பணத்தை எப்படி எடுக்கலாம்.?
புதிய முறை செயல்படுத்தப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் உங்கள் PF இருப்பில் சுமார் 75 சதவீத தொகையை உங்களால் எடுக்க முடியும். ஆனால், மீதமுள்ள 25 சதவீத தொகையை உங்கள் PF கணக்கில் வைத்திருக்க வேண்டியிருக்கலாம். இதற்குப் பிறகு, எடுக்கப்பட்ட தொகையை UPI ஐடியை பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். பின்னர், இந்த பணத்தை நீங்கள் UPI அல்லது ATM மூலம் அணுக முடியும். இருப்பினும், EPFO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே இறுதி விதிகள் மற்றும் நடைமுறைகள் தெளிவாகத் தெரியவரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















