மேலும் அறிய

கொரோனா காலத்தில் கனரா அறிவித்த 3 புதிய கடன் திட்டங்கள் !

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் கனரா வங்கி மூன்று புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. அத்துடன் பொருளாதாரத்திலும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பலர் அதிகளவில் பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் தொழில்நிறுவனங்களும் இயங்க முடியாததால் தங்களின் நிறுவனத்தை எப்படி நடத்துவது என்று தவித்து வருகின்றன.

இந்நிலையில் கனரா வங்கி கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மூன்று புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி கனரா சுரக்‌ஷா கடன் திட்டத்தின் மூலம் கொரோனா சிகிச்சை பெற்று வரும் தனி நபர்கள் கடன் பெற்று கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 25000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உடனடியாக கடன் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்கள் முதல்  6 மாதங்கள் வரை வட்டி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு கனரா சிக்கிடிஷா சுகாதார கட்டமைப்பு கடன் திட்டம் மூலம் கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் முதல் 50 கோடி வரை கடன் வழங்கப்பட உள்ளது. இந்த வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் வட்டியும் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 18 மாதங்களுக்கு வட்டி செலுத்த விலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் கனரா ஜீவன் ரேகா சுகாதார மற்றும் மருத்துவ பொருட்களை தயாரிக்கும் தொழில்களுக்கான கடன் திட்டம் மூலம் சுகாதாரத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் தொடர்பாக கனரா வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளது. 

மேலும் படிக்க:பணம் சேமிக்க உதவும் டாப் 5 மொபைல் ஆப்ஸ் !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget