மேலும் அறிய

LIC எம்பெடட் ஷேர் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கலாம்: அரசு அதிகாரி கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு  நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்ஐசியின்) ஐபிஓ பங்குகள் விற்பனை வரும் மார்ச் மாதம்  வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு  நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்ஐசியின்) ஐபிஓ பங்குகள் விற்பனை வரும் மார்ச் மாதம்  வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அதன் எம்பெடட் ஷேர் எனப்படும் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும்  அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வணிக உலகில் இது பரபரப்பான பேச்சாக உருவாகியுள்ளது.

ஐபிஓ என்றால் என்ன?

ஐபிஓ என்பது ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) ஆகும். (IPO - Initial Public Offering) மூலம் பொது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்ய முடியும். இது, நிறுவனங்கள் தங்கள் பல்வேறு தொழில் செயல்பாடுகள் அல்லது வணிக விரிவாக்கத்திற்காக பணத்தை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இதைச் செய்யும். ஆனால், எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனமும் இதை இப்போது கையில் எடுத்துள்ளது.

ரூ.5 லட்சம் கோடி:

(எல்ஐசியின்)  ஐபிஓ பங்குகள் விற்பனை அடுத்த மாதம் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில்,மத்திய அரசு சார்பில் இன்னும்  உட்பொதிக்கப்பட்ட பங்குகள் விலை குறித்து அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இது ரூ.5 லட்சம் கோடிக்கும்அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  எதிர்பார்க்கப்படும்படி வரும் மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை நடந்தால், நாட்டிலேயே இது மிகப்பெரிய ஐபிஓ விற்பனையாக மாறும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஊடகங்கள் தரப்பில் எல்ஐசி ஐபிஓ மதிப்பு 5300 கோடி டாலர் முதல் 15,000 கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

ஐபிஓ விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைக்கலாம் என்றும் அதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால், உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு வெளியாகும்போது எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் உயரும், அந்த பங்குகள் மதிப்பின் மூலம் எவ்வளவு பணத்தை மத்திய அரசால் பெற முடியும் என்பதும் தெரியவரும். 

நிபுணர் கருத்து என்ன?

எல்ஐசி, ஐபிஓ பங்கு விற்பனை குறித்து மத்திய அரசின் பங்கு விலக்கல் துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறும்போது, "எல்ஐசி பங்குகளி்ன் எம்பெடட் ஷேர் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். நிறுவனத்தின் மதிப்பு இந்தத் தொகையைவிட இன்னும் அதிகமாக இருக்கும்" என்றார்.

ஆனால், பொருளாதார வல்லுநர்களோ, எம்பெடட் ஷேர் மதிப்பைவிட 4 மடங்கு முதல் 5 மடங்குவரை எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு இருக்கும் எனக் கூறுகின்றனர்.

ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் எல்ஐசி நிறுவனத்திடமே இருக்கிறது. 

வரைவு ஐபிஓ பத்திரங்களை அடுத்த வாரம் முதலே முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளதாக துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்Red Pix Apologize | ”சவுக்கின் கருத்தில் உடன்பாடில்லை.. மன்னிச்சிடுங்க”Savukku Shankar | கையை பிடித்து முறுக்கி.. வலி தாங்க முடியாத சவுக்கு ADVOCATE பகீர் தகவல்Savukku Shankar | ’’செல்போன் நம்பர் கேட்டாரு!’’பெண் காவலர் பகீர் புகார்! அடுத்த சிக்கலில் சவுக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Embed widget