தங்கம் விலை: ஒரு நாள் குறையும்... ஒரு நாள் கூடும்... ஒவ்வொரு நாளும் உயரும்!
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 264க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 கேரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 523க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 10 உயர்ந்து ரூபாய் 4 ஆயிரத்து 533க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் நேற்று சவரன் தங்கம் ரூபாய் ரூபாய் 36 ஆயிரத்து 184க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 264க்கு விற்கப்பட்டது.
அதேபோல, 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 897க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 176க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 72.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 72 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.






















