மேலும் அறிய

எல்.ஐ.சி., ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் மத்திய அரசு

எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீடுக்கு (ஐ.பி.ஓ.) மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு ஏற்ப விதிமுறைகளை நிதி அமைச்சகம் மாற்றி இருக்கிறது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் பொதுமக்கள் / முதலீட்டாளர்கள் வசம் இருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டது. 2010-ம் ஆண்டு முதல் இந்த உத்தரவு இருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறைந்த சதவீத பங்குகள் மட்டுமே வர்த்தகமாகும்போது குறிப்பிட்ட சிலர் இணையும் பட்சத்தில் பங்குகளின் விலையில்  மாற்றம் செய்யமுடியும் என்பதால் 25 சதவீத பங்குகள் வர்த்தகமாக வேண்டும் என 2010-ம் ஆண்டு விதிமுறையை செபி உருவாக்கியது. தொடக்கத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2014-ம் ஆண்டு முதல் மற்ற நிறுவனங்களை போல பொதுத்துறை நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. முதலில் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கப்பட்டுவந்தது. இந்த கால  அவகாசம் ஆகஸ்ட்  மாதத்தில் அவகாசம் முடிய இருக்கிறது.


எல்.ஐ.சி., ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் மத்திய அரசு

இந்த நிலையில் குறைந்த பட்சம் 25 சதவீத பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்னும் விதி பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது. அதாவது மத்திய அரசு விரும்பினால் அந்த சலுகையை எந்த பொதுத்துறை நிறுவனத்துக்கும் வழங்கலாம் என விதிமுறையை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஐபிஓ

இந்த விதிமுறையை மாற்றுவதற்கும் எல்.ஐ.சி. ஐபிஓவுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும்.  எல்.ஐ.சி. மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் முதல் ரூ.15 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய விலை நிலவரப்படி ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.13.11 லட்சம் கோடி. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.11.71 லட்சம் கோடி. அடுத்த இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி இருக்கிறது. இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.7.88 லட்சம் கோடி மட்டுமே. தற்போதைய சூழலில் எல்.ஐ.சி. பட்டியலும் பட்சத்தில் சந்தை மதிப்பு அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக மாறும்.

25 சதவீத பங்குகளை வெளியிட வேண்டும் என்னும் பட்சத்தில் சுமார் 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட வேண்டும். இது மிகப்பெரிய தொகை. தவிர ஒரே நிதி ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவதில் சிக்கல் உருவாகலாம் என மத்திய அரசு கருதலாம்.

குறைந்த தொகை என்னும் பட்சத்தில் எல்.ஐ.சி போன்ற பெரிய நிறுவனத்தின் ஐபிஓவை எளிதாக வெளியிட முடியும் என மத்திய அரசு திட்டமிட்டுவதாக தெரிகிறது.


எல்.ஐ.சி., ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் மத்திய அரசு

செபி விதிமுறைகளின் படி குறைந்தபட்சம் 10 சதவீதம் வர்த்தகமாக வேண்டும். ஆனால் அந்த சதவிகித்தை கூட ஒரே சமயத்தில் குறைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை என தெரிகிறது. முதல் 5% முதல் 6% சதவீதம் வரை குறைத்துக்கொண்ட பிறகு அடுத்தகட்டமாக மீதமுள்ள சதவீதத்தை குறைத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது. ஒரே சமயத்தில் நிதி திரட்டுவதை விட பட்டியலான பிறகு பங்கின் மதிப்பு எப்படியும் கணிசமாக  உயரும், அந்த விலையில் சில சதவிகித்தை குறைத்துக் கொள்வதன் மூலம் பிரீமியத்தில் கூடுதல் தொகையை திரட்ட முடியும் என மத்திய அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.

நடப்பு நிதி ஆண்டில் பொத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இதுவரை ரூ.7,645 கோடி மட்டுமே  திரட்டப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (2022 ஜனவரி முதல் மார்ச் வரை) ஐபிஒ வெளியிட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எல்.ஐ.சி. ஐபிஓ முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget