மேலும் அறிய

ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறையா? இப்போவே குறிச்சுக்கோங்க..!

மாதந்தோறும் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. 

மாதந்தோறும் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. 

ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதம் 15 நாட்கள் விடுமுறை பரவிக் கிடப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியிலும் வியாபாரிகள், வர்த்தகர்கள் மத்தியிலும் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதி ஞாயிறு விடுமுறைகளும், 2 ஆம் மற்றும் 4 ஆம் சனி விடுமுறையும் அடங்கும். இதுதவிர 8 நாட்கள் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறும் மத ரீதியான விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியனவற்றிற்காக வரும் விடுமுறைகள். 

ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறைகளை மூன்று வகைப்படுத்தி ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. அதாவது, பண்டிகை கால விடுமுறைகள் (‘Holiday under Negotiable Instruments Act’)., ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் ஹாலிடே மற்றும் வங்கிக் கணக்கு முடித்தலுக்கான விடுமுறை (‘Banks’ Closing of Accounts’) என்று வகைமைப் படுத்தியுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விடுமுறைக்களில் எத்தனை நாட்கள் பண்டிகை நிமித்தமாக வருகின்றன என்பதைப் பார்ப்போம். பொதுவாக பண்டிகை, மத விழாக்கள் விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதனால், ஒரு மாநிலத்தில் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதனால் பிற மாநிலத்தவர் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல் சில விழாக்கள் உள்ளூர் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதனால், அந்த விழாக்களின் போது அந்த குறிப்பிட்ட கிராமமோ, நகரமோ அங்குள்ள வங்கிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை இருக்கும். ஆகையால் அது குறித்தும் எந்த கலக்கமும் கொள்ளத் தேவையில்லை.

ஆகஸ்ட் 1 ஆம் தேதியே தொடங்கும் விடுமுறை:

ஆகஸ்ட் 1 ஞாயிறு அன்று பிறந்துள்ளதால், மாதத்தின் முதல் நாளான இன்று விடுமுறையில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் நாடு முழுவதுமே வங்கிகளுக்கு விடுமுறை தான். இதுதவிர அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை வரும் நாட்கள் இரண்டு. ஒன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி மற்றொன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரண்டு நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 19ல் முஹரம் அனுசரிக்கப்படுகிறது. அகர்தலா, அகமதாபாத், பேலாபூர், போபா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் அன்று முகரம் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 17 நகரங்களில் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஜன்மாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு ஊர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 15 நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், ஷிம்லா, ஸ்ரீநகர், காங்டாக் ஆகிய நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இவை தவிர மற்ற விடுமுறை நாட்கள் பெரும்பாலும் உள்ளூர் விடுமுறையாகவே அமையும். அதனால் வாடிக்கையாளர்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி கலக்கமடைய வேண்டாம்.
  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget