மேலும் அறிய

பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்

80 ஆயிரம் கனஅடி வெள்ளத்திலும் பாலாற்றின் நடுவே சிவலிங்கத்துடன் கூடிய ஓலைக்கோயில் கம்பீரமாக நிலைத்து நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியே பாயும் பாலாற்றில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையால் பெய்து வந்த தொடர் கன மழையினாலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரினாலும், குடியாத்தம் நகருக்குள் பாயும் கவுண்டன்ய மகாநதி, மற்றும் மேல்பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகொண்டா பாலாற்றில் வரலாறு காணாத அளவில் சுமார் 80 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளிகொண்டா பாலாறு பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாலாற்றின் நடுவில் தென்னை ஓலையில் குடிசையாக கட்டப்பட்ட சிறிய சிவன் கோவில் அமைந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பக்தியுடன் வணங்கிவருகின்றனர்.


பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்

இக்குடிசை கோவிலானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதி பாலாற்று மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கையில் கல் போன்ற ஒரு பொருள் பெரியதாக தெண்பட்டுள்ளது. இதனை சிறுவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் அறிந்து சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று பார்த்த போது அங்கு சிவன் லிங்க வடிவிலான மரகதம் சிலைகளை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலாற்று மணலில் கண்டெடுத்த சிவலிங்கத் பொது மக்கள் ஆராய்ந்த போது இச்சிலைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் அடிப்படையில் இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையாக  இருக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பாலாற்றின் நடுப்பகுதியிலேயே கம்புகளை கொண்டு ஒரு தென்னை ஓலை குடிசை அமைத்து அதில் கண்டெகுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களால் கோயிலாக பராமரிக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இதற்க்கு ஆதி பரமேஸ்வரி கோயில் என்றும் பெயரிடப்பட்டு தினமும் ஆராத்தி, அபிஷேகம், பூஜைகளையும் செய்து வருகின்றனர்.


பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்
 
இந்நிலையில் கடந்த மாதம் வரலாறு காணாத அளவிற்கு பள்ளிகொண்டா பாலாற்றில் சுமார் 80 ஆயிரம் கனஅடிக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பாலாற்றின் கரையோரம் இருந்த சிமெண்ட் சீட் வீடுகள், மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பல இடங்களில் தரைப்பாலங்களும் அடித்து செல்லபட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்படியான சூழலிலும் பாலாற்றின் நடுவே ஓலைக் கொட்டகையால் (குடிசை) அமைக்கப்பட்ட ஆதி பரமேஸ்வரி சிவன் கோயிலையும் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்து ஓடியது ஆனால் ஓலைக்குடிசையில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாலாற்று வெள்ளத்தின் நடுவே நங்கூரம் பாய்ச்சியது போல் கொஞ்சமும் அசையாமல் நிலைத்து நின்றுகொண்டிருந்தது.


பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்
 
மேலும் கோயிலைச் சுற்றி இருந்த வேப்ப மரங்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நிற்கின்றது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சிவன் கோவில் கமைந்துள்ள பகுதி மணல் மேடாகி தீவு போல் காட்சி அளிக்கிறது. இச்செயலை பார்த்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் பக்கதர்கள் ஆச்சரியமடைந்து. இயற்கையாகவே கடவுள் என்ற நிலையில் எத்தகை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டாலும் கடவுளை எதுவும் செய்து விடாது என்று பக்தர்கள் மெய்சிலித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget