மேலும் அறிய

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: கோவிந்தா...! கோவிந்தா...! கோஷம் முழங்க கரூரில் வழிபாடு

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டம், வெங்கமேடு குளத்துப்பாளையத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கற்பக விநாயகர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஸ்ரீருக்மணி அம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: கோவிந்தா...! கோவிந்தா...! கோஷம் முழங்க கரூரில் வழிபாடு

பின்னர் ஆலயத்தின் மூலவர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் உற்சவர் மற்றும் மூலவர் ஸ்வாமிகளுக்கு பஞ்சாமிர்தம், தேன், நெய்,  பால், தயிர்,  இளநீர்,  எலுமிச்சைச் சாறு,  அபிஷேக பொடி,  திருமஞ்சள்,  மஞ்சள்,  சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து புனித தீர்த்தத்தால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

பின்னர் ஆலயத்தின் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, அதன் தொடர்ச்சியாக மூலவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் உற்சவர் ருக்மணி தாயார் மற்றும் பண்டரிநாதன் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வகையான ஆபரணங்களால் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் பண்டரிநாதன் ஆலயத்தின் பட்டாச்சாரியார் அனைத்து தெய்வங்களுக்கும் பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: கோவிந்தா...! கோவிந்தா...! கோஷம் முழங்க கரூரில் வழிபாடு
அதைத்தொடர்ந்து, துளசி மற்றும் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை மற்றும் ஏகாதேசி விழாவை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: கோவிந்தா...! கோவிந்தா...! கோஷம் முழங்க கரூரில் வழிபாடு

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம், மேட்டு தெருவில் உள்ள  ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயம், சேங்கல் மலை ஸ்ரீ  பெருமாள் ஆலயம், கரூர் நகர பகுதியில் உள்ள ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் இன்று அதிகாலை சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பின்னர் சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு , நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி மகாதீபாராதனை நடைபெற்றது.

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: கோவிந்தா...! கோவிந்தா...! கோஷம் முழங்க கரூரில் வழிபாடு

ஊரடங்கு சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு அரசு மீண்டும் ஆலயங்களை வெள்ளி, சனி ,ஞாயிறு உள்ளிட்ட மூன்று நாட்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிறப்பு பூஜையின் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சார்பாக செய்திருந்தனர். மாவட்டத்தில் ஒரு சில ஆலயங்களில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget