மேலும் அறிய

விரதமிருந்து மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்.....300 ஆண்டுகளாக தஞ்சையில் நடக்கும் நிகழ்வு

இதுவும் எங்கள் விழா... தஞ்சை அருகே 10 நாட்கள் விரதம் இருந்து முகரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள்.

தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை ஒரு கிராம மக்கள் பத்துநாட்கள் விரதம் இருந்து, தீயில் இறங்கி மிகுந்த பயபக்தியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் மட்டுமின்றி, சமூக, சமுதாய, மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் அம்சமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையின் போது இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று காசவள நாடு புதூர் மக்கள் முகரம் பண்டிகை வழக்கம்போல் 10 நாட்கள் விரதம் இருந்து கொண்டாடினர்.


விரதமிருந்து மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்.....300 ஆண்டுகளாக தஞ்சையில் நடக்கும் நிகழ்வு

காசவளநாடு புதூர் கிராமத்தில்  நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள், இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்)  உள்ள “அல்லா சாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் கை உருவத்தை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இருவேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.

அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் படையலிட்டனர். மேலும் மாலைகள் அணிவித்தும்  அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். நேற்று இரவு தொடங்கி காலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி சென்றது.

பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த காத்திருந்த ஏராளமானோர் தீயில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் என்பவர் கூறியதாவது:  இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.


விரதமிருந்து மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்.....300 ஆண்டுகளாக தஞ்சையில் நடக்கும் நிகழ்வு

இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்மியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இதற்காக பத்து நாள் விரதமும் இருக்கிறோம்.

அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் "கரகம்"  எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து, பட்டுத்துணிகளை போர்த்தி, இரவு முழுவதும் வீடு வீடாக சென்ற பின்னர், விடியற்காலையில் அல்லாவை வணங்கி, வேண்டுதலை நிறைவேற்ற தீமிதி இறங்குவோம் என்றார்.

இந்த விழா தஞ்சை மாவட்டத்தில் சமூக சமுதாய மற்றும் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரசியலில் ஆதாயம் தேட நினைப்பவர்கள் ஜாதி, மதம் ஆகியவற்றைக் காட்டி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். ஆனால் மக்கள் மனதில் அனைவரும் ஓரினம். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணம் எப்பொழுதும், ஒற்றுமையுடன் நிலைத்து நிற்கிறது என்பதற்கு இதுபோன்ற விழாக்களும் ஒரு முன்னுதாரணம் ஆகும் என்று சமூக ஆர்வலர்கள் தலைப்பில் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 

 
 
 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs RR: பவுலிங்கில் கலக்கிய ராஜஸ்தான்.. மார்க்ரம், பதோனி அபாரம்! 181 ரன்களை எடுக்குமா?
IPL 2025 LSG vs RR: பவுலிங்கில் கலக்கிய ராஜஸ்தான்.. மார்க்ரம், பதோனி அபாரம்! 181 ரன்களை எடுக்குமா?
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
IPL 2025 DC vs GT: அசத்திய அசுதோஷ்.. கலக்கிய கருண்.! 204 ரன்களை எட்டிப்பிடிக்குமா குஜராத்?
IPL 2025 DC vs GT: அசத்திய அசுதோஷ்.. கலக்கிய கருண்.! 204 ரன்களை எட்டிப்பிடிக்குமா குஜராத்?
மக்களே உஷார்... இந்த பெயரில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
மக்களே உஷார்... இந்த பெயரில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ramadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMKDurai Vaiko Resign | தூக்கியெறிந்த துரைவைகோவிழிபிதுங்கி நிற்கும் வைகோ மதிமுகவில் கோஷ்டி பூசல் | Vaiko | MDMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs RR: பவுலிங்கில் கலக்கிய ராஜஸ்தான்.. மார்க்ரம், பதோனி அபாரம்! 181 ரன்களை எடுக்குமா?
IPL 2025 LSG vs RR: பவுலிங்கில் கலக்கிய ராஜஸ்தான்.. மார்க்ரம், பதோனி அபாரம்! 181 ரன்களை எடுக்குமா?
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
IPL 2025 DC vs GT: அசத்திய அசுதோஷ்.. கலக்கிய கருண்.! 204 ரன்களை எட்டிப்பிடிக்குமா குஜராத்?
IPL 2025 DC vs GT: அசத்திய அசுதோஷ்.. கலக்கிய கருண்.! 204 ரன்களை எட்டிப்பிடிக்குமா குஜராத்?
மக்களே உஷார்... இந்த பெயரில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
மக்களே உஷார்... இந்த பெயரில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
கண்ணியம் முக்கியம்; நீங்கள் ரசிகர்கள் அல்ல – தவெக ஐடி விங் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
Stalin Announcement: தொழில்முனைவோர் கவனத்திற்கு.. முதலமைச்சர் வெளியிட்ட 5 அறிவிப்புகள் பற்றி தெரியுமா.?
தொழில்முனைவோர் கவனத்திற்கு.. முதலமைச்சர் வெளியிட்ட 5 அறிவிப்புகள் பற்றி தெரியுமா.?
India Vs China: நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல் – வைகோ அதிர்ச்சி
Embed widget