Aavani Month Rasipalan: துலாம் ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா?
Aavani Month Rasipalan: அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு சூரியன் சிம்ம ராசியிலிருந்து என்ன செய்யப் போகிறார் இந்த ஆவணி மாதத்தில் என்பதை பார்க்கலாம்.
![Aavani Month Rasipalan: துலாம் ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா? Aavani Month Rasipalan aavani Maadha Rasipalan Zodiac Daily Horoscope Thulaam Dhulaam Aavani Month Rasipalan: துலாம் ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/3980fe73620f8d5e346e4bd9a94321871724127247351572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துலாம் ராசி - ஆவணி மாத ராசி பலன்
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு சூரியன் சிம்ம ராசியிலிருந்து என்ன செய்யப் போகிறார் இந்த ஆவணி மாதத்தில் என்பதை பார்க்கலாம். துலாத்திற்கு பதினோராம் அதிபதி பாதகாதிபதி என்றெல்லாம் சொல்லுவார்கள். உண்மைதான் காரணம் சுக்கிரனுக்கு சூரியன் எப்பொழுதும் பக்கத்திலேயே பயணித்துக் கொண்டிருப்பார். துலாத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்புடன் எப்பொழுதும் இயங்குவார்கள் அதனால் தான் சனி பகவான் அங்கு உச்சமாக இருப்பார். வேகமாக செயல்பட கூடியவர்கள் மேஷம் ராஜாவின் வீடு என்றால் துலாம் தொழிலாளர்களின் வீடு.
கடுமையாக உழைப்பவர்கள் இல்லை என்றால் ராஜாவின் ராஜங்கம் இருப்பது கடினம் தானே. ஒரு உழைப்பாளரை வைத்து தானே வேலையே நடைபெறுகிறது. எந்த வேலையும் செய்யாமல் உழைக்காமல் இருந்து விட்டால் வாழ்க்கை எப்படி நகரும்? சரி இதற்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம் ? சூரியன் ராஜா அதனால்தான் அவர் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷம் மலையில் இருக்கக்கூடிய ராஜாவின் வீடு என்றால் துலாம் உழைப்பாளரின் வீடு ராஜாவுக்கும் உழைப்பாளருக்கும் ஏழாம் பொருத்தம் . அதனால் சூரியன் 11 ஆம் வீட்டில் ஆட்சி பெறுவது பாதகத்தை உண்டாக்கும் என்று கூறுவார்கள் ஆனால் ஒரு உழைப்பாளரை ராஜா கூப்பிட்டு தட்டிக் கொடுத்து நான்கு பேர் முன்பாக உயர்த்தினார் என்றால் அது பெருமை தானே. அப்படித்தான் தற்போது நடக்கப்போகிறது....
உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்:
உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஏற்கனவே குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுடைய சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அமைதியாக ஒரு இடத்தில் உங்களை இருக்க வைத்திருப்பார். அந்த நிலை தற்போது ஆவணியில் மாறும் காரணம் செப்டம்பர் 5ஆம் தேதி குரு வக்ரம் நடைபெறப் போகிறது. அப்படி என்றால் துலாம் ராசிக்கு ஏழாம் வீட்டை நோக்கி குரு பகவான் பயணிக்கும் அதே வேளையில் சூரியன் 11 இல் ஆட்சி பெறுவது மிகப்பெரிய பண வளங்களை கொடுக்கும். வங்கியில் சேமிப்பு உயரம் அளவிற்கு பண வருவாய் இருக்கும் மற்றவர்கள் உங்களிடத்தில் வந்து பணம் கேட்கும் அளவிற்கு நீங்கள் செழிப்பாகத்தான் இருப்பீர்கள். புதிய வேலை அமையும் யாருக்கெல்லாம் நீண்ட நாட்களாக ஏற்கனவே ஒரு வேலை இருக்கிறது பெரிதாக ஒன்றும் அதிலிருந்து வருமானம் வருவதில்லை ஆகையால் வேறு ஒரு வருமானத்திற்கு வழி பார்க்க இருக்கிறேன் என்று சொல்பவர்களுக்கு இது ஏற்ற காலம்தான். முதல் திருமணம் சரியாக அமையவில்லை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது அதிலிருந்து விடுபட்டு இரண்டாம் திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆவணி மாதம் அதற்கான மாதம் தான்.
தேடி வந்து பேசுவார்கள்:
கையில் இருக்கக்கூடிய பணங்கள் கரையாத அளவிற்கு வருமானம் இருக்கும் நண்பர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள் அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய உங்களுக்கு நிச்சயமாக வழிகாட்டுதல் கிடைக்கும்.. தாயார் மகாலட்சுமி வழங்கி வாருங்கள் நன்மை பிறக்கும புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள் அல்லவா அதற்கு ஏற்றார் போல் தற்போது வரக்கூடிய பொற்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வேலை அமையும் வாழ்க்கை துணையின் உடல்நிலை சீராகும் உங்களின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். இப்படியாக பல நன்மைகள் நடைபெறக்கூடிய காலகட்டம் தான் இது வாழ்த்துக்கள் வணக்கம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)