மேலும் அறிய

தஞ்சை: பயிர்களை துண்டாக்கும் எலிகள்; வயல்களில் எலி கிட்டிகள் வைக்கும் விவசாயிகள்

தஞ்சை அருகே புதுகல்விராயன், சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள வயல்களில் விவசாயிகள் எலி கிட்டி வைக்கும் பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர். குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியும் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருப்பதால் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து வயல்களில் எலிகளை பிடிக்க கிட்டி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வயல்களிலும் சுமார் 50 எலிகள் வரை பிடிபடுகின்றன. தற்போது 75 நாட்களை கடந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில் பால் பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் எலித் தொல்லை அதிகம் இ இருப்பதால் அவை நன்கு வளர்ந்து வரும் பயிர்களை துண்டித்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதையடுத்து எலித் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் எலி கிட்டி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


தஞ்சை: பயிர்களை துண்டாக்கும் எலிகள்; வயல்களில் எலி கிட்டிகள் வைக்கும்  விவசாயிகள்

பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள பயிர்களில் இருந்து வரும் வாசனையை முகர்ந்து பயிரை துண்டாக்கி விடுகிறது எலிகள். இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் எலித் தொல்லையை போக்கும் வகையில் விவசாயிகள் நன்கு வளர்ந்துள்ள பயிர்களுக்கு மத்தியில் எலி கிட்டி வைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இவ்வாறு வைக்கப்படும் கிட்டிகளில் அதிக எண்ணிக்கையில் எலிகள் சிக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதே எலிகளை கட்டுப்படுத்தினால்தான் அறுவடை நேரத்தில் நெல் சேதாரம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்பதால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எலி கிட்டி வைப்பதை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவ்வபோது மழையும், தொடர்ந்து மாலைநேரத்திலேயே கடும் பனியும் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் பயிர்களை தாக்கும் பூச்சிகள் அதிகரித்து விடும் என்றும் விவசாயிகள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர். பயிர்கள் நன்கு செழித்து வளர உரம் இடும் பணிகளும் வெகு வேகமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் விவசாயிகள் நவீன முறையில் ட்ரோன்களை பயன்படுத்தி பயிர்களுக்கு பூச்சிமருந்துகளை தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget