மேலும் அறிய

கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வறட்சி: தென்னை, பனை மரங்கள் கருகி மடியும் பரிதாபம் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. அதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன. மேலும், கடந்த 2 மாதங்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலை விட கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

கடுமையான வறட்சி காரணமாக மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சியை தாங்கி நிற்கக்கூடிய பனைமரங்களால் கூட இந்த ஆண்டு நிலவும் மிக கடுமையான வறட்சியை தாங்க முடியவி்ல்லை. மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, பனை மரங்கள் தண்ணீரின்றி கருகி மடியும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மரணத்தருவாயில் இருக்கும் தென்னை, பனை மரங்களின் உயிரை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து விவசாயி குணசீலன் வேலனிடம் கேட்டபோது, “கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. நிலத்தடி நீர் சுரண்டல்: கடும் வறட்சியை கூட தாங்கக்கூடிய பனை மரங்கள் இந்த அளவுக்கு கருகும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதே காரணம். அதுபோல மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை குளங்களில் முறையாக சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்காததுமே இந்த அழிவுக்கு காரணம். உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் பல இடங்களில் தென்னை மரங்கள் முற்றிலும் கருகி பாலைவனம் போல காட்சியளிக்கிறது. சில பகுதிகளில் குறைந்த அளவு நிலத்தடி நீர் இருந்தாலும் அது உவர் நீராக உள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதன் விளைவாக கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக மாறியுள்ளது. இந்த தண்ணீர் மூலமாவது தென்னை மரங்களை பாதுகாக்க முடியுமா என விவசாயிகள் போராடி வருகின்றனர். எனது தோட்டத்திலும் 150 தென்னை மரங்களை பாதுகாக்க போராடி வருகிறேன். சில விவசாயிகள் தென்னை மரங்களை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். அடுத்த ஓரிரு மாதங்களில் மழை பெய்யவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும்.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை, பனை மரங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டும். அதுபோல வட்சியால் கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Embed widget