மேலும் அறிய

கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வறட்சி: தென்னை, பனை மரங்கள் கருகி மடியும் பரிதாபம் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. அதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன. மேலும், கடந்த 2 மாதங்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலை விட கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

கடுமையான வறட்சி காரணமாக மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சியை தாங்கி நிற்கக்கூடிய பனைமரங்களால் கூட இந்த ஆண்டு நிலவும் மிக கடுமையான வறட்சியை தாங்க முடியவி்ல்லை. மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, பனை மரங்கள் தண்ணீரின்றி கருகி மடியும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மரணத்தருவாயில் இருக்கும் தென்னை, பனை மரங்களின் உயிரை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து விவசாயி குணசீலன் வேலனிடம் கேட்டபோது, “கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. நிலத்தடி நீர் சுரண்டல்: கடும் வறட்சியை கூட தாங்கக்கூடிய பனை மரங்கள் இந்த அளவுக்கு கருகும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதே காரணம். அதுபோல மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை குளங்களில் முறையாக சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்காததுமே இந்த அழிவுக்கு காரணம். உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் பல இடங்களில் தென்னை மரங்கள் முற்றிலும் கருகி பாலைவனம் போல காட்சியளிக்கிறது. சில பகுதிகளில் குறைந்த அளவு நிலத்தடி நீர் இருந்தாலும் அது உவர் நீராக உள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதன் விளைவாக கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக மாறியுள்ளது. இந்த தண்ணீர் மூலமாவது தென்னை மரங்களை பாதுகாக்க முடியுமா என விவசாயிகள் போராடி வருகின்றனர். எனது தோட்டத்திலும் 150 தென்னை மரங்களை பாதுகாக்க போராடி வருகிறேன். சில விவசாயிகள் தென்னை மரங்களை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். அடுத்த ஓரிரு மாதங்களில் மழை பெய்யவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும்.


கொளுத்தும் வெயில்; கருகும் பனை, தென்னை மரங்கள் - நிவாரணம் கேட்கும் தூத்துக்குடி விவசாயிகள்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை, பனை மரங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டும். அதுபோல வட்சியால் கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
வாழைத்தார் விலை வீழ்ச்சி! இலை சாகுபடி மூலம் லாபம்! மாசி பட்டத்தில் தஞ்சாவூர் விவசாயிகள் புதிய முயற்சி
வாழைத்தார் விலை வீழ்ச்சி! இலை சாகுபடி மூலம் லாபம்! மாசி பட்டத்தில் தஞ்சாவூர் விவசாயிகள் புதிய முயற்சி
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget