மேலும் அறிய

Budget 2024 Expectations:: கிராமங்கள் தோறும் நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கிராமங்களில் நெல்லை காய வைக்கும் களம் இல்லை. இதனால் மழை, வெயிலுக்கு இடையே சிரமப்பட வேண்டியுள்ளது.

தஞ்சாவூர்: காவிரி பாயும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக நெல் உலர்த்தும் களங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகுமா?

டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கடலை, எள், பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வர். ஆனாலும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யும் நெல்லை காய வைப்பதற்கு சாலை மற்றும் பொது இடங்களைப் விவசாயிகள் பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. கிராமங்களில் போதுமான கள வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. 

டெல்டா மாவட்டத்தில் பல்வேறு பயிா்கள் பயிரிடப்பட்டாலும், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை காய வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் சாலைகளிலும், பைபாஸ்களிலும் விவசாயிகள் நெல்லை காய வைக்கின்றனர். இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 


Budget 2024 Expectations:: கிராமங்கள் தோறும் நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தற்போதைய நிலையில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு நெல் நடவுச் செலவு, உழவு செய்தல், கரை கட்டுதல் மற்றும் இடுபொருள்கள் என ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை செலவாகிறது. நெல் கொள்முதலின் போது நெல்லில் ஈரப்பதம் உட்பட பல்வேறு நிலைகள் பார்க்கப்படுகிறது. நெல்லை காய வைக்கும் களம் இல்லை. இதனால் விவசாயிகள் சாலைகளில் நெல்லை காய வைக்கின்றனர்.

இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்கின்றனர். கிராமங்களில் நெல்லை காய வைக்கும் களம் இல்லை. இதனால் மழை, வெயிலுக்கு இடையே சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை வணிகத் துறை அல்லது நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் களம் வசதி ஏற்படுத்தவும், நெல்லை மூடி வைக்க தாா்ப்பாலின் ஆகியவையும் வழங்கவும் வேண்டும் என்று விவசாயிகள் நெடு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த கோரிக்கை தற்போதைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தஞ்சை 8.கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயி குமார் கூறியதாவது:

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிராமங்கள் தோறும் நெல்லை காய வைக்கும் களம் அமைத்து தர வேண்டும். அதேபோல், விவசாயிகளுக்குத் தேவையான நெல் மூடி வைக்கும் படுதா மற்றும் தாா்பாலின் ஆகியவை அந்தந்த கிராமங்களில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மிகவும் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். இதனால் கிராம சாலைகள் மற்றும் பைபாஸ் சாலைகளில் நெல்லை விவசாயிகள் காய வைக்கும் நிலை மாறும். எனவே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு விற்பனை வரை வேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே கிராமங்கள் தோறும் விவசாயிகள் நெல்லை காய வைக்க தேவையான களங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget