மேலும் அறிய

யாஷிகா கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் FIRST ON ABP NADU | Yashika First Statement On Her Car Accident

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது,அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின், நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து நேற்று இரவு தனது நண்பர்களுடன் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்றுள்ளனர்.

 

காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்து உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279, 337, 304 A அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் "கடமை செய்" ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.22,200 அதிரடி தள்ளுபடியில் புதிய Galaxy S26 - அமேசானில் மாஸ் சலுகை!
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.22,200 அதிரடி தள்ளுபடியில் புதிய Galaxy S26 - மாஸ் சலுகை!
சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு ஷாக்! பூர்வீகத் தாயின் பிள்ளைகளுக்கு முழு உரிமை - ஐகோர்ட்
சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு ஷாக்! பூர்வீகத் தாயின் பிள்ளைகளுக்கு முழு உரிமை - ஐகோர்ட்
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! இன்று வானிலையில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்...
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! இன்று வானிலையில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்...
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: நிபுணர் குழுவின் 4 நாள் விரிவான ஆய்வு இன்று தொடக்கம்!
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: நிபுணர் குழுவின் 4 நாள் விரிவான ஆய்வு இன்று தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore : பிரதமர் வேட்பாளர் ராகுலா.? விஜய்யா.? நரிக்கதை சொல்லி வெளுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்
பிரதமர் வேட்பாளர் ராகுலா.? விஜய்யா.? நரிக்கதை சொல்லி வெளுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்
Vijay: பிரதமர் வேட்பாளர் விஜயா? .. கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்.. தவெகவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
Vijay: பிரதமர் வேட்பாளர் விஜயா? .. கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்.. தவெகவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
Vanniyarasu: உங்கள் வீட்டில் மட்டும் தான் சோஃபா இருக்க வேண்டுமா? தனுஷ் பாணியில் திமுகவிற்கு அமைச்சர் வன்னியரசு கேள்வி
உங்கள் வீட்டில் மட்டும் தான் சோஃபா இருக்க வேண்டுமா? தனுஷ் பாணியில் திமுகவிற்கு அமைச்சர் வன்னியரசு கேள்வி
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Diesel Automatic Cars: மைலேஜோடு ஓட்டவும் ஈசியா இருக்கனுமா? ரூ.15 லட்சத்தில் டீசல் ஆட்டோமேடிக் கார்கள் - 4 சாய்ஸ்
மைலேஜோடு ஓட்டவும் ஈசியா இருக்கனுமா? ரூ.15 லட்சத்தில் டீசல் ஆட்டோமேடிக் கார்கள் - டாப் 4 சாய்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
Embed widget