மேலும் அறிய

Whatsapp Spam Calls : வாட்ஸ் அப் பயனர்களுக்கு எச்சரிக்கை... வெளிநாடுகளில் இருந்து வரும் மோசடி கால்ஸ்... உடனே நடவடிக்கை எடுத்த நிறுவனம்..!

இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்கு சம்மந்தமே இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து கடந்த சில நாட்களாகவே அழைப்புகள் வர தொடங்கின.

இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்கு சம்மந்தமே இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து கடந்த சில நாட்களாகவே அழைப்புகள் வர தொடங்கின. இந்நிலையில்,  வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தங்கள் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் அமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மோசடி அழைப்புகள் வருவது 50 சதவீதம் வரை குறையும் என்று கூறியுள்ளனர்.

வாட்ஸ் - அப் செயலி:

மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ் - அப் செயலி உலகம் முழுவதும் மாதத்திற்கு 200 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. குறுந்தகவல்களை அனுப்புவதில் முதன்மையான செயலியாகவும் திகழ்கிறது. பொதுமக்களிடையே இத்தையை பெரும் பயன்பாட்டை கொண்டிருப்பதே, அதில் பல்வேறு தவறுகள் நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் தான் பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை ஒன்று வாட்ஸ்- அப் செயலியில் உருவாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள்:

குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்வது முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தற்போது வாட்ஸ்-அப் செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது சம்மந்தமே இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக மலேசியா, கென்யா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து இந்த அழைப்புகள் வருகின்றன. ஆனால், இந்த அழைப்புகளை மேற்கொள்வது யார், அவர்களுக்கு நோக்கம் என்ன என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.

குவிந்த புகார்கள்:

அநாவசிய அழைப்புகள் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் போன்றவற்றை பயனாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கவலைகளையும், புகாரையும் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்கள் சந்தேகத்திற்குரிய கணக்குகளை உடனடியாக பிளாக் செய்து, புகாரளிக்கும்படி மெட்டா நிறுவனம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 சதவீதம் குறைவு

இதுகுறித்து வாட்ஸ் அப் கூறுகையில், ”பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதை தங்களின் முன்னுரிமையாக உள்ளது. தற்போது சில நாட்களாக வெளிநாடுகளிலிருந்து மோசடி கால்கள் வருவதாக புகார் எழுந்தது. ஸ்பேம் கால்ஸ்களை குறைக்க வாட்ஸ் அப் அதன் AI, ML அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 50 சதவிதம் ஸ்பேம் கால்ஸ்களை கட்டுப்படுத்த முடியும்.  மேலும், பயனர்களுக்கு தரவுகளை பாதுகாப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும் அதனை பிளாக் செய்ய வேண்டும்.” என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

எப்படி பிளாக் செய்வது:

  • வாட்ஸ்அப்பில் ஒரு எண்ணை பிளாக் செய்ய, பயனாளர்கள் முதலில் குறிப்பிட்ட எண்ணிற்கான சாட் - பாக்ஸை திறக்க வேண்டும்
  • கால் ஆப்ஷனிற்கு அருகே உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்
  • பிளாக் எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

பிளாக் செய்யப்பட்ட தொடர்புகளால் இனி உங்களை அழைக்கவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாது. உங்களுடைய லாஸ்ட் சீன், ஆன்லைனில் ஸ்டேடஸ்க்ள் மற்றும் உங்கள் சுயவிவரப் புகைப்படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என எதையுமே பிளாக் செய்த நபரால் இனி பார்க்க முடியாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Embed widget