மேலும் அறிய

Tiktok: இந்திய ஊழியர்களுக்கு இனி வேலை இல்லை.. கொத்தாக மொத்த பேரையும் பணிநீக்கம் செய்த டிக்டாக் நிறுவனம்..

இந்திய ஊழியர்கள் அனைவரயும் ஒரே அடியாக பணியிலிருந்து விடுவிப்பதாக, டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்:

சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் குழுமத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி நிறுவனத்திற்காக, இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கூறிய பிறகு 40 ஊழியர்களையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அதோடு அவர்களுக்கு 9 மாதங்களுக்கான ஊதியமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது. 

காரணம் என்ன? 

சீன செயலிகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியின் பயன்பாட்டை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை என கூறி, இந்த பணிநீக்க நடவடிக்கையை எடுப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றி வரும் 40 ஊழியர்களுக்கும், பிப்ரவரி 28ம் தேதி தான் கடைசி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ததன் மூலம், இந்தியாவில் தனது செயல்பாட்டை முற்றிலும் நிறுத்த டிக்டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பாக டிக் டாக் நிறுவனம் இந்தியாவில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் செயலிக்கு தடை:

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்தியாவில் இரண்டாவது பெரிய பயனர் தளத்தைக் கொண்டிருந்த TikTok செயலி கடந்த 2020ம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் செயல்பாடு நிறுத்தப்பட்ட போதிலும், அந்நிறுவனம் இன்னும் இங்கு அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இந்திய அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலான TikTok ஊழியர்கள் பிரேசில் மற்றும் துபாயை சேர்ந்த பயனாளர்களுக்கான சேவையை வழங்கி வந்தனர்.  இதனிடையே, பைட் டான்ஸ் நிறுவனம் தங்கள் தரப்பை நியாயப்படுத்த முயன்றாலும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இதனால் இந்தியாவில்  டிக்டாக் செயலியை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் சூழல் தற்போதைக்கு இல்லை. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

பெரும் வரவேற்பு பெற்ற டிக்டாக் செயலி:

கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் டிக்டாக் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர் தங்களது நடனம் மற்றும் பாடல் போன்ற தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், 15 விநாடிகளுக்கு வீடியோ வெளியிடும் அம்சத்துடன் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்ட்ராய்ட் செயலி பதிவிறக்கங்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி 2017ம் ஆண்டு முதலிடம் பிடித்தது. இந்த செயலிக்கு அதிக பயனாளர்களை கொண்ட நாடாக சீனாவை தொடர்ந்து இந்தியா மாறியது.

தடை ஏன்:

இதனிடையே, செயலியை பதிவிறக்கம் செய்ததும் உள்ளீடு செய்யும் தகவல்களை சேமித்து வைக்கும் டிக்டாக் நிறுவனம், அவற்றை சட்டவிரோதமாக சீன அரசுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைதொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக, கடந்த 2020ம் ஆண்டு டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget