மேலும் அறிய

நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!

"செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கும் பொழுது உதவியாக இருக்கும் “

இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதியை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ‘அரசியலைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் இந்திய அரசியலமைப்பு தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரசியலமைப்பு தின நிகழ்வின் நிறைவு விழா நேற்று (சனிக்கிழமை ) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  நீடித்த  நீதி வழங்குவதை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் ‘ செயற்கை நுண்ணறிவு ‘ ஆச்சர்யமான வகையில் உதவும் என தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு   மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. 


நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!
வழக்குகளின் மேலாண்மை மற்றும் அவற்றின் அனுமதி விகிதங்கள் , ஆன்லைன் மூலம் சட்டங்கள் மற்றும் வழக்குகளில் தகவல்களை அறிதல்  போன்றவற்றை செயல்படுத்த தானியங்கி அல்காரிதம் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் பொழுது நீதித்துறையின் செயல்பாடுகளை  அதிகரிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது நிலையான நீதி வழங்கலை உறுதி செய்வதற்கும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்கும் வழி வகை செய்யும் என்கிறார் சட்ட அமைச்சர்   கிரண் ரிஜிஜு .


நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!
நீதி மன்றங்களில் எந்த வகையான உதவிகளை செயற்கை நுண்ணறிவு செய்ய போகிறது என கேட்கலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஹூமனாய்ட் அல்லது செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் நீதிகள் வழங்கும் பொழுதி நீதிபதிகளுக்கு உதவியாக , ஒரு சார்பற்ற தீர்ப்பை வழங்குவதற்கு அவை உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இப்படி மனிதர்களின் திறனுடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவை நாடும் பொழுது, விரைந்து நீதி வழங்க உதவியாக இருக்கும் என்ற அமைச்சர்  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு போதுமான நீதித்துறை உள்கட்டமைப்பு முக்கியமானது என்றும் தற்போதைய அரசாங்கம், அனைவருக்கும் நீதியை எளிதாகவும் சரியான நேரத்தில் வழங்கவும் அனுமதிக்கும் வகையில் நீதிமன்ற உள்கட்டமைப்பை எளிமையாக்கியுள்ளது எனவும் தெவித்தார்,. மேலும் உள்கட்டமைப்பு தகராறுகளைத் தீர்ப்பதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது.  தேசிய நலன்களை மனதில் வைத்து வளர்ச்சிப் பாதையின் ஓட்டத்திற்கும் செலவிடுவது உத்தமம் எனவும் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget