மேலும் அறிய

சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஆரம்பம் - மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு – அதிர்ச்சி குண்டு போட்ட பயிற்சியாளர்

அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு.

சிஎஸ்கே அணிக்கு என்ன சார் ஆச்சு… இப்படி திடீர்னு சொதப்பராங்க என்ற பேச்சு, சேப்பாக்கம் மைதானம் போனாலே கேட்குது. அதுமட்டுமல்ல, இனி வரும் ஆட்டங்கள் எல்லாம், சென்னை அணிக்கு மிக, மிக முக்கியம். வெல்ல வேண்டியது மட்டுமல்ல, அதிக ரன் ரேட்டும் தேவை. இந்த நிலையில், சிஎஸ்கே அணி, மகிழ்ச்சியான சூழல், வழக்கமான பயற்சிகள் என வழக்கம்போல் தமது வலைப்பயிற்சிகளில் தீவிரமாக இருக்கிறது.

"ப்ளே ஆஃப்" போட்டிகளுக்கு தகுதிப்பெறப் போவது யார் எனும் கட்டத்தை நெருங்கும் நேரத்தில், மற்ற அணிகள் பட்டைய கிளப்புகின்றன. ஆனால், சிஎஸ்கே அணி திடீரென தடம் புரள்கிறது.  இதுபோதாதென்று, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சென்னை அணியின் கோடான கோடி ரசிகர்களின் ஆசையை துவம்சம் செய்யும் வகையில் அதிர்ச்சி குண்டு ஒன்றைப் போட்டுள்ளார். 

பயிற்சியாளர் போட்ட அதிர்ச்சி குண்டு:

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சீல் பலமாக இருப்போர் என்றால், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான், தீபக் சாஹர் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள்தான். இவர்கள் தவிர்த்து, ரிச்சர்ட் கிலீசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். ஆனால், இதுவரை சிறப்பாகப் பந்துவீசி வந்த பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர், தீபக் சாஹர் ஆகிய நான்கு பேரும் இனி அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே என அதிர்ச்சிக் குண்டை போட்டுள்ளார் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்.

உலகக் கோப்பை போட்டிகள், ஜூன் 2-ம் தேதி தொடங்குவதால், ஐபிஎஸ் போட்டிகளில் ஆடியது போதும், தாயகப் பணிக்குத் திரும்புங்கள் என முஸ்தாபீசூர் ரஹ்மானை, வங்கதேசம் அழைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் எதிராக அவர் விளையாடிய போட்டிதான், இந்த ஐபிஎல்-லில் அவர் ஆடிய கடைசிப் போட்டி. அதேபோல், உலகக் கோப்பை செல்வதற்கான, “விசா” நடைமுறைகளுக்கு பதிரானாவும் சுழற்பந்துவீச்சாளர் தீட்சனாவும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் எப்போது வருவார்கள் என்பது குறித்து இதுவரை தெளிவான அறிக்கை இல்லை. 

இந்தச் சூழலில், கடந்த போட்டியில், சில பந்துகள் வீசிய போது, காயம் அடைந்து வெளியேறிய கோடிகளில் வாங்கப்பட்ட நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து நேர்மறையான தகவல்கள் இல்லை என்பது வருத்தம் தருகிறது. அவர் மீண்டு வர காலதாமதம் ஆகும் என பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, காய்ச்சல் காரணமாக அவதிப்படும் துஷார் தேஷ் பாண்டேவும் மேலும் சில ஆட்டங்களுக்கு தலைக்காட்ட மாட்டார் எனவும் கூறப்படுகிறது. 

இதனால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல், பொதுவாக ரன்களை வாரி வழங்கும் முகேஷ் சவுத்ரி, ஷர்துல் தாக்கூர், கடந்த போட்டியில் அறிமுகமான ரிச்சர்ட் கிலீசன் ஆகியோர்தான் இனி மீதமுள்ள போட்டிகளில் சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்களைத் தவிர, ஜடேஜா, சிவம் துபே, மொய்ன் அலி, சாண்ட்னர் போன்ற சுழல்பந்துவீச்சாளர்கள்தான் சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பரவும் “மேட்ச் பிக்சிங்” பேச்சு:

இதற்கிடையே, சிஎஸ்கே அணிக்கு என்னாச்சு, மேட்ஸ் ஃபிக்சிங் ஏதேனும் செஞ்சிட்டாங்களா என சமுக வலைதளங்களிலும் சேப்பாக்கம் மைதானத்திலும் ரசிகர்கள் பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் பேசுவதற்கு ஏற்ப, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படுசொதப்பலாக இருந்தது. அண்மையில் ஃபார்முக்கு வந்த மிட்செல் வர வேண்டிய இடத்தில் சிவம் துபே, அதேபோல், மொய்ன் அலி வர வேண்டிய இடத்தில் ஜடேஜா, “தல” தோனி கூட, கடைசி ஓவரில் ரன் எடுக்காமல், சிக்சர் மட்டும்தான் அடிப்பேன் என அடம்பிடித்த காட்சி, கேட்ச்-களைக் கோட்டைவிடும் காட்சிகள், பல நேரங்களில் சொதப்பும் ஃபீல்டிங் போன்றவற்றை எல்லாம் பார்க்கும் போது, “லைட்டா” சந்தேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது என சிஎஸ்கே ரசிகர்கள் பேசுவது காதில் விழாமல் இல்லை. 

கடும் சவால் காத்திருக்கு:

10 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கும் சிஎஸ்கே அணி, மீதமுள்ள 4 ஆட்டங்களில், மூன்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும். அப்போதுதான், ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். தற்போதுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஆனால், ஒரு வெளிச்சக் கீற்று என்னவென்றால், அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு. அது இந்த முறை சாத்தியமாகுமா என்பது, அடுத்த  இரு வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Embed widget