மேலும் அறிய

சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஆரம்பம் - மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு – அதிர்ச்சி குண்டு போட்ட பயிற்சியாளர்

அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு.

சிஎஸ்கே அணிக்கு என்ன சார் ஆச்சு… இப்படி திடீர்னு சொதப்பராங்க என்ற பேச்சு, சேப்பாக்கம் மைதானம் போனாலே கேட்குது. அதுமட்டுமல்ல, இனி வரும் ஆட்டங்கள் எல்லாம், சென்னை அணிக்கு மிக, மிக முக்கியம். வெல்ல வேண்டியது மட்டுமல்ல, அதிக ரன் ரேட்டும் தேவை. இந்த நிலையில், சிஎஸ்கே அணி, மகிழ்ச்சியான சூழல், வழக்கமான பயற்சிகள் என வழக்கம்போல் தமது வலைப்பயிற்சிகளில் தீவிரமாக இருக்கிறது.

"ப்ளே ஆஃப்" போட்டிகளுக்கு தகுதிப்பெறப் போவது யார் எனும் கட்டத்தை நெருங்கும் நேரத்தில், மற்ற அணிகள் பட்டைய கிளப்புகின்றன. ஆனால், சிஎஸ்கே அணி திடீரென தடம் புரள்கிறது.  இதுபோதாதென்று, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சென்னை அணியின் கோடான கோடி ரசிகர்களின் ஆசையை துவம்சம் செய்யும் வகையில் அதிர்ச்சி குண்டு ஒன்றைப் போட்டுள்ளார். 

பயிற்சியாளர் போட்ட அதிர்ச்சி குண்டு:

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சீல் பலமாக இருப்போர் என்றால், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான், தீபக் சாஹர் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள்தான். இவர்கள் தவிர்த்து, ரிச்சர்ட் கிலீசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். ஆனால், இதுவரை சிறப்பாகப் பந்துவீசி வந்த பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர், தீபக் சாஹர் ஆகிய நான்கு பேரும் இனி அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே என அதிர்ச்சிக் குண்டை போட்டுள்ளார் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்.

உலகக் கோப்பை போட்டிகள், ஜூன் 2-ம் தேதி தொடங்குவதால், ஐபிஎஸ் போட்டிகளில் ஆடியது போதும், தாயகப் பணிக்குத் திரும்புங்கள் என முஸ்தாபீசூர் ரஹ்மானை, வங்கதேசம் அழைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் எதிராக அவர் விளையாடிய போட்டிதான், இந்த ஐபிஎல்-லில் அவர் ஆடிய கடைசிப் போட்டி. அதேபோல், உலகக் கோப்பை செல்வதற்கான, “விசா” நடைமுறைகளுக்கு பதிரானாவும் சுழற்பந்துவீச்சாளர் தீட்சனாவும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் எப்போது வருவார்கள் என்பது குறித்து இதுவரை தெளிவான அறிக்கை இல்லை. 

இந்தச் சூழலில், கடந்த போட்டியில், சில பந்துகள் வீசிய போது, காயம் அடைந்து வெளியேறிய கோடிகளில் வாங்கப்பட்ட நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து நேர்மறையான தகவல்கள் இல்லை என்பது வருத்தம் தருகிறது. அவர் மீண்டு வர காலதாமதம் ஆகும் என பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, காய்ச்சல் காரணமாக அவதிப்படும் துஷார் தேஷ் பாண்டேவும் மேலும் சில ஆட்டங்களுக்கு தலைக்காட்ட மாட்டார் எனவும் கூறப்படுகிறது. 

இதனால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல், பொதுவாக ரன்களை வாரி வழங்கும் முகேஷ் சவுத்ரி, ஷர்துல் தாக்கூர், கடந்த போட்டியில் அறிமுகமான ரிச்சர்ட் கிலீசன் ஆகியோர்தான் இனி மீதமுள்ள போட்டிகளில் சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்களைத் தவிர, ஜடேஜா, சிவம் துபே, மொய்ன் அலி, சாண்ட்னர் போன்ற சுழல்பந்துவீச்சாளர்கள்தான் சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பரவும் “மேட்ச் பிக்சிங்” பேச்சு:

இதற்கிடையே, சிஎஸ்கே அணிக்கு என்னாச்சு, மேட்ஸ் ஃபிக்சிங் ஏதேனும் செஞ்சிட்டாங்களா என சமுக வலைதளங்களிலும் சேப்பாக்கம் மைதானத்திலும் ரசிகர்கள் பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் பேசுவதற்கு ஏற்ப, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படுசொதப்பலாக இருந்தது. அண்மையில் ஃபார்முக்கு வந்த மிட்செல் வர வேண்டிய இடத்தில் சிவம் துபே, அதேபோல், மொய்ன் அலி வர வேண்டிய இடத்தில் ஜடேஜா, “தல” தோனி கூட, கடைசி ஓவரில் ரன் எடுக்காமல், சிக்சர் மட்டும்தான் அடிப்பேன் என அடம்பிடித்த காட்சி, கேட்ச்-களைக் கோட்டைவிடும் காட்சிகள், பல நேரங்களில் சொதப்பும் ஃபீல்டிங் போன்றவற்றை எல்லாம் பார்க்கும் போது, “லைட்டா” சந்தேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது என சிஎஸ்கே ரசிகர்கள் பேசுவது காதில் விழாமல் இல்லை. 

கடும் சவால் காத்திருக்கு:

10 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கும் சிஎஸ்கே அணி, மீதமுள்ள 4 ஆட்டங்களில், மூன்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும். அப்போதுதான், ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். தற்போதுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஆனால், ஒரு வெளிச்சக் கீற்று என்னவென்றால், அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு. அது இந்த முறை சாத்தியமாகுமா என்பது, அடுத்த  இரு வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும். 

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Nissan Tekton Price: நிசான் டெக்டான் வாங்கப் போறீங்களா.? அப்போ, அதோட வேரியண்ட்டுகளையும், விலைகளையும் தெரிஞ்சுக்கோங்க
நிசான் டெக்டான் வாங்கப் போறீங்களா.? அப்போ, அதோட வேரியண்ட்டுகளையும், விலைகளையும் தெரிஞ்சுக்கோங்க
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
Embed widget