சென்னையை பஞ்சர் ஆக்குமா பஞ்சாப்? முதலில் பேட்டிங் செய்யும் மஞ்சள் படை
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
பழி தீர்க்குமா சிஎஸ்கே?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னையை பொறுத்தவரையில், அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சென்னை அணி விவரம்: ஷேக் ரஷீத் ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா, டேவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, சாம் கரன், தீபக் ஹூடா
தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் சென்னை அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற அதீதி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி கண்டது. மற்றொன்று மழையால் கைவிடப்பட்டது.
பரபரப்பாகும் ஐபிஎல்:
இதனால் இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்ட உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர பஞ்சாப் அணியும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் சென்னை அணியும் களம் இறங்குகிறது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் மும்பை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும் மற்ற இரண்டு அணிகளும் அடுத்தடுத்த இடங்களையும் வகிக்கின்றன.
கடைசியாக விளையாடிய போட்டியில் வென்று இருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வரை முன்னேறி இருக்கக் கூடும். ஆனால், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் இரண்டுமே, தாங்கள் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியே கண்டுள்ளன.
இதனால், மும்பை வலுவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறக்கூடும். அதுவே சென்னை அணி வெற்றி பெற்றால், பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் மும்பை அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைக்க உதவும்.




















