![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022, KKR vs MI: அதிரடி ஆட்டம்... அரைசதம் கடந்த சூர்யா... கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
![IPL 2022, KKR vs MI: அதிரடி ஆட்டம்... அரைசதம் கடந்த சூர்யா... கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு! IPL 2022: MI given target of 162 runs against KKR in Match 14 at MCA Stadium IPL 2022, KKR vs MI: அதிரடி ஆட்டம்... அரைசதம் கடந்த சூர்யா... கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/7b493be89af28f9d4256d64160351597_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரோகித் சர்மா தலைமையிலான 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இரு வீரர்களும் ரன் எடுக்க திணற, சிறப்பாக பந்து வீசி உமேஷ் யாதவ் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து கேப்டன் ரோஹித் அதிரடியை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 3 வது ஓவரில் கேப்டன் ரோஹித் ஷர்மா 12 பந்துகளில் 3 ரன் எடுத்து விக்கெட் கீப்பர் பில்லிங்ஸிடம் அவுட் ஆனார்.
தொடர்ந்து, ஒரு பக்கம் இஷான் கிஷன் ரன் எடுக்க திணற, மறு பக்கம் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியை தொடர்ந்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ப்ரீவிஸ், வருண் வீசிய 8 வது ஓவரில் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் பில்லிங்ஸிடம் ஸ்டெம்ப் அவுட்டானார். 10 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்து மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்த இஷான் கிஷன், கம்மின்ஸ் வீசிய 11 வது ஓவர் முடிவில் 14 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து, சூர்யாகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை தொடர, மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.
மறுபுறம் திலக் வர்மாவும் மும்பை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்த அதிரடியாக விளையாட, மும்பை அணி 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் 5 பந்துகள் மிச்சம் இருக்க 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் தன் பங்குக்கு மூன்று சிக்ஸர், ஒரு பௌண்டரி விரட்ட, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 38 ரன்களுடனும், பொல்லார்ட் 22 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)