![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dhoni Cried: கல்லு மாதிரி இருந்த மனுஷன்...! கண் கலங்கிய தருணம்...! தூக்கி கொண்டாட வச்ச ஜடேஜா!
சென்னை அணிக்கான வெற்றி இலக்கை அடித்ததும், நேரடியாக தோனியை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்தார். ஜடேஜாவை கட்டிப்பிடித்த தோனி அவரை தூக்கி வைத்து கொண்டாடினார். அப்போது தோனி கலங்கினார்.
![Dhoni Cried: கல்லு மாதிரி இருந்த மனுஷன்...! கண் கலங்கிய தருணம்...! தூக்கி கொண்டாட வச்ச ஜடேஜா! Dhoni Cried on Chennai Super Kings won 5 trophy in IPL 2023 Dhoni Cried: கல்லு மாதிரி இருந்த மனுஷன்...! கண் கலங்கிய தருணம்...! தூக்கி கொண்டாட வச்ச ஜடேஜா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/30/e76cde904ab1c5a721e19f0783b7dce61685393955007728_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அணிக்கான வெற்றி இலக்கை அடித்ததும், நேரடியாக தோனியை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்தார். ஜடேஜாவை கட்டிப்பிடித்த தோனி அவரை தூக்கி வைத்து கொண்டாடினார். அப்போது தோனி கலங்கினார்.
M.O.O.D! 🤗
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Ravindra Jadeja 🤝 MS Dhoni#TATAIPL | #Final | #CSKvGT | @imjadeja | @msdhoni pic.twitter.com/uggbDA4sFd
15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பின்னர் 13வது ஓவரை வீசிய மோகித் சர்மா அந்த ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி விட்டுக்கொடுத்து, ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு எப்படி ஏமாற்றமாக இருந்ததோ, அதைவிட தோனிக்கு இருந்தது. ஆடுகளத்தைவிட்டு வெளியேறிய தோனி, தனது அணியுடன் போய் அமர்ந்து கொண்டு யாரிடமும் பேசாமல் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். அவரிடம் மற்ற சென்னை வீரர்கள் பேசவுமில்லை.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால், போட்டி குஜராத் கரங்களுக்குச் சென்றது. இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்து டாட் பாலாக வீசிய மோகித் சர்மா, அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் விட்டுக்கொடுக்க, போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஜடேஜா, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)