மேலும் அறிய

Indian Hockey Team: அவரோட செல்ஃபி எடுத்தாங்க..ஆனா எங்கள புறக்கணிச்சிட்டாங்க! ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் ஷாக்

பிரபல யூடியூபர் டோலி சாய்வாலா (சுனில் பாட்டீல்) உடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள் எங்களை புறக்கணித்தனர் என்று இந்திய ஹாக்கி அணி வீரர் ஹர்திக் சிங் கூறியுள்ளார்.

பிரபல யூடியூபர் டோலி சாய்வாலா உடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள் எங்களை புறக்கணித்தனர் என்று இந்திய ஹாக்கி அணி வீரர் ஹர்திக் சிங் கூறியுள்ளார்.

ஹாக்கியில் அசத்தும் இந்தியா:

அண்மையில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இப்படி இந்த ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கும் வரவேற்பும், மரியாதையும் புகழ் வெளிச்சமும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம்:

இந்த நிலையில் தான் இந்திய ஹாக்கி அணி வீரர் ஹர்திக் சிங் ஒரு பரபரப்பான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது வித்தியாசமாக தேநீர் தயாரிக்கும் பாணியால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் டோலி சாய்வாலா. சாலை ஓரம் இருக்கும் இவரது கடைக்குச் சென்ற தேநீர் பருகி இவருடன் செல்பி எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் கூட அண்மையில் இந்தியா வந்த போது டோலி சாய்வாலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்படி உலகம் முழுவதும் அவர் பிரபலம். இப்படிப்பட்ட சூழலில் தான் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தங்களது வெற்றியை தொடர்ந்து நாடு திரும்பி உள்ளனர். அப்போது விமான நிலையத்தில்  டோலி சாய்வாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஹாக்கி வீரர்களை மக்களுக்கு தெரியவில்லை:

அதே நேரம் ஹாக்கி வீரர்களுடன் யாரும் செல்ஃபி எடுப்பதை புறக்கணித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் சிங் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசுகையில்,"விமான நிலையத்தில் நான் அதை என் கண்களால் பார்த்தேன். ஹர்மன்ப்ரீத்சிங். நான், மன்தீப் சிங். நாங்கள் 5-6 பேர் இருந்தோம். டோலி சாய்வாலாவும் இருந்தார். மக்கள் எங்களை அடையாளம் காணவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தோம். எங்களை நினைத்து நாங்கள் அசிங்கமாக உணர்ந்தோம்.

ஹர்மன்ப்ரீத் 150க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார், மன்தீப் 100க்கும் மேற்பட்ட பீல்டு கோல்களை அடித்துள்ளார்,ஒரு விளையாட்டு வீரருக்கு, புகழ் மற்றும் பணம் இரண்டும் ஒன்றுதான். ஆனால், மக்கள் உங்களைப் பார்த்து பாராட்டும் போது, ​​ஒரு விளையாட்டு வீரருக்கு அதைவிட பெரிய மனநிறைவு எதுவும் இல்லை"என்று கூறியுள்ளார் ஹர்திக் சிங்.

ஹர்திக் சிங், இந்தியாவுக்காக 142 போட்டிகளில் விளையாடி அணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget