மேலும் அறிய

T20 World Cup 2022 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி : மகுடம் சூடப்போவது யார்..? இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை..!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். 

கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன் தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து கோப்பையை வெல்ல முயற்சிக்கும். 

இருநாட்டு அணிகளை பொறுத்தவரை, இங்கிலாந்து பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. ஆனால், டி20 போட்டியில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றியை தக்கவைக்கும். 

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் தோல்வியுடன் தொடங்கியது. அதன்பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றது. தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

பாகிஸ்தான் அணி தொடக்க ஜோடியை அதிகம் நம்பியுள்ளது. கடந்த சில போட்டிகளில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் பந்துவீச்சில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிரட்டி வருகின்றனர். 

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கடந்த 1992ம் ஆண்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதுபோலவே இன்றைய போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என அந்நாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி:

பாகிஸ்தான் அணியை போலவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்று தருகின்றனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. 

ஹெட் டூ ஹெட் :

போட்டிகள்: 28

இங்கிலாந்து வெற்றி: 18

பாகிஸ்தான் வெற்றி: 09

முடிவு இல்லை: 01

டி20 உலகக் கோப்பையில் நேருக்கு நேர் :

போட்டிகள்: 2

இங்கிலாந்து வெற்றி: 2

பாகிஸ்தான் வெற்றி: 0

மழைக்கு வாய்ப்பா..? 

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியானது மழையால் காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, மழை குறுக்கிட்டு போட்டி தொடங்க தாமதமானால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. 

போட்டி ஆரம்பம்: இரவு 7.00
முதல் முதல் இன்னிங்ஸ்: இரவு 7.00-8.28
இன்னிங்ஸ் இடைவேளை: இரவு 8.28-8.48
2வது இன்னிங்ஸ்: இரவு 8:48-10:30
மழை குறுக்கிட்டால் வழங்கப்படும் கூடுதல் நேரம்  இரவு 10:30 முதல் காலை 12:00 வரை

ரிசர்வ் நாள் உள்ளதா..? 
 
மெல்போர்ன் மைதானத்தில் கரு மேகக்கூட்டங்கள் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நாள் முழுவதும் மழை குறுக்கிட்டால் ரிசர்வ் நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை இன்றே போட்டியை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி:

1. பாபர் ஆசாம் (கேப்டன்), 2. முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 3. முகமது ஹரிஸ், 4. ஷான் மசூத், 5. இப்திகார் அகமது, 6. முகமது நவாஸ், 7. ஷதாப் கான், 8. முகமது வாசிம், 9. நசீம் ஷா, 10. ஹரிஸ் ரவுப், 11. ஷஹீன் ஷா அப்ரிடி.

கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:

1. ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 2 அலெக்ஸ் ஹேல்ஸ், 3 டேவிட் மாலன் / பில் சால்ட், 4 பென் ஸ்டோக்ஸ் 5 ஹாரி புரூக், 6 லியாம் லிவிங்ஸ்டோன், 7 மொயீன் அலி, 8 சாம் குர்ரன், 9 கிறிஸ் வோக்ஸ், 10 மார்க் வூட் / கிறிஸ் ஜோர்டன் / டேவிட் வில்லி, 11 அடில் ரஷித்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget