மேலும் அறிய

T20 World Cup: "ஐ.பி.எல். மட்டுமே போதும் என்ற நினைப்பில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். மட்டும் போதும் என்ற மனநிலையில் ஆடுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் எளிதில் வென்றது. இதனால், சூப்பர் 12 ஆட்டத்திலும் இந்தியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தானிடமும், நியூசிலாந்திடமும் படுதோல்வி அடைந்து பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்திய அணி தோல்வியடைந்ததை காட்டிலும், இரண்டு போட்டிகளிலும் போராடாமல் தோற்றது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பல நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


T20 World Cup:

இந்திய அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளராகவும் செயல்பட்ட வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,

“ இந்தியாவின் மூத்த வீரர்கள் அனைவரும் தேசிய அணிக்காக டி20 ஆட்டங்களில் கடைசியாக மார்ச் மாதம் ஆடினர். தற்போது நவம்பர் மாதம் ஆகிவிட்டது. இது எதைக்காட்டுகிறது என்றால், அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டிகளே போதும் என்று நினைக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.


T20 World Cup:

உலகம் முழுவதும் நீங்கள் விரும்பும் அளவிற்கு லீக் கிரிக்கெட் போட்டிகளை ஆடுகிறீர்கள். லீக் (ஐ.பி.எல்., கரிபீயன்) போன்ற போட்டிகளில் ஆடும்போது எதிரணியில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் 5 சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நேரிடும்.

இது ஒன்றும் சிறந்த ஆட்டம் இல்லை. இது ஒருதலைபட்சமாக நடந்த ஆட்டம். இந்தியா நிறைய தவறுகளை செய்துள்ளது. அவர்கள் எப்போது எல்லாம் டாஸ் இழக்கிறார்களோ, அப்போது எல்லாம் அவர்கள் மனதளவில் பின்னடைவைச் சந்திப்பதை நான் உணர்கிறேன். ஒரு வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ரோகித்சர்மாவை மூன்றாவது வீரராக களமிறக்கியது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா நான்கு சதங்களை டி20 போட்டிகளில் தொடக்க வீரராகதான் அடித்துள்ளார். அவர்கள் இஷான்கிஷானை மூன்றாவது வீரராக இறக்க வேண்டும். இந்திய அணி அச்சத்துடன் ஆடியதற்கு இதுவே தொடக்கம் என்று கருதுகிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


T20 World Cup:

உலககோப்பை சூப்பர் 12 பிரிவில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 6 அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் 5வது இடத்தில் -1.609 என்ற புள்ளிகளுடன் உள்ளது. ரோகித், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷான், பாண்ட்யா, ஜடேஜா என்ற நீண்ட பேட்டிங் வரிசையும், பும்ரா, புவனேஷ்குமார்,ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என்று பந்துவீச்சாளர்களை கொண்ட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான புள்ளி விவரங்களுடன் தோற்பது சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி தோற்றவுடன் பேன் ஐ.பி.எல். என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Embed widget