மேலும் அறிய

Shami on Kohli: சதம் அடித்தால்தான் நல்ல வீரரா?...- கோலிக்கு ஆதரவளிக்கும் ஷமி !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணியில் இடம்பிடித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “விராட் கோலி ஒரு சிறப்பான கேப்டன். அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களின் கேப்டன். களத்தில் பந்துவீச்சாளர்களிடம் ஆலோசனை கேட்டு கொண்டு இருப்பார். எங்களை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பந்துவீச அனுமதிப்பார். அவர் அணிக்கு ஒரு புதிய சக்தியை எப்போதும் கொண்டு வருவார். அவருடைய கேப்டன்சி சிறப்பாக அமைந்தது. 

இவர் நீண்ட நாட்களாக சதம் அடிக்கவில்லை என்று விமர்சனம் செய்து தவறு. ஏனென்றால் ஒரு சிறப்பான வீரர் எப்போதும் சதம் அடிக்க தேவையில்லை. அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து அரைசதங்களை அடித்து வருகிறார். அவர் அடிக்கும் 60, 70 ரன்களுக்கும் அணிக்கு மிகவும் முக்கியமானவை தான். ஆகவே சதம் அடிக்கவில்லை என்று குறை கூறுவது என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறு. இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக யார் வேண்டுமானாலும் வரலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் யாருக்கு தான் அணியை வழி நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்காது” எனக் கூறியுள்ளார். 


Shami on Kohli: சதம் அடித்தால்தான் நல்ல வீரரா?...- கோலிக்கு ஆதரவளிக்கும் ஷமி !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு அடுத்து யார் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருப்பார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் ரன் மெஷினாக கருதப்படும் விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். 

மேலும் படிக்க: “தோனியைப் போல ஒருவரைப் பார்த்தது இல்லை; அவர் போன் நெம்பர் கூட என்னிடம் இல்லை” - ரவி சாஸ்திரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.