மேலும் அறிய

மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

இந்திய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட உள்ளார். 

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா மனம்திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற புதிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், “அஸ்வின் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். அஸ்வினை நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை பார்த்து வருகிறேன். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து வகை போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 

குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவருடைய எகானமி மிகவும் குறைவான ஒன்று. அவர் 2016 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு பெரிதாக ஒருநாள் அணியில் விளையாடவில்லை. இருப்பினும் அவருடைய திறமை குறையவில்லை. அவர் இன்னும் ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அவரை பவர்பிளேவில் பயன்படுத்தலாம், நடு ஓவர்களில் பயன்படுத்தலாம், டெர்த் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். அப்படி ஒரு பந்துவீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

என்னை பொருத்தவரை அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் பவுலர். அதாவது ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளர். ஆகவே அவரை போன்ற ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். அவரை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய அனுபவம் எப்போதும் அணிக்கு கை கொடுக்கும். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 தொடர்களில் நிச்சயம் மீண்டும் இடம்பிடிப்பார்” எனக் கூறியுள்ளார். 


மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் 4 ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை. முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற  டி20 உலகக் கோப்பை தொடரில் 4ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆகவே அதேபோன்று ரோகித் சர்மா தலைமையிலான புதிய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலேயே அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க: ஐபிஎல் சூதாட்டம் - ரூ. 100 கோடி கேட்ட தோனி வழக்கு ஒத்திவைப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Embed widget