மேலும் அறிய

மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

இந்திய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட உள்ளார். 

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா மனம்திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற புதிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், “அஸ்வின் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். அஸ்வினை நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை பார்த்து வருகிறேன். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து வகை போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 

குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவருடைய எகானமி மிகவும் குறைவான ஒன்று. அவர் 2016 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு பெரிதாக ஒருநாள் அணியில் விளையாடவில்லை. இருப்பினும் அவருடைய திறமை குறையவில்லை. அவர் இன்னும் ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அவரை பவர்பிளேவில் பயன்படுத்தலாம், நடு ஓவர்களில் பயன்படுத்தலாம், டெர்த் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். அப்படி ஒரு பந்துவீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

என்னை பொருத்தவரை அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் பவுலர். அதாவது ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளர். ஆகவே அவரை போன்ற ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். அவரை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய அனுபவம் எப்போதும் அணிக்கு கை கொடுக்கும். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 தொடர்களில் நிச்சயம் மீண்டும் இடம்பிடிப்பார்” எனக் கூறியுள்ளார். 


மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் 4 ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை. முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற  டி20 உலகக் கோப்பை தொடரில் 4ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆகவே அதேபோன்று ரோகித் சர்மா தலைமையிலான புதிய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலேயே அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க: ஐபிஎல் சூதாட்டம் - ரூ. 100 கோடி கேட்ட தோனி வழக்கு ஒத்திவைப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget