மேலும் அறிய

மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

இந்திய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட உள்ளார். 

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா மனம்திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற புதிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், “அஸ்வின் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். அஸ்வினை நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை பார்த்து வருகிறேன். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து வகை போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 

குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவருடைய எகானமி மிகவும் குறைவான ஒன்று. அவர் 2016 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு பெரிதாக ஒருநாள் அணியில் விளையாடவில்லை. இருப்பினும் அவருடைய திறமை குறையவில்லை. அவர் இன்னும் ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அவரை பவர்பிளேவில் பயன்படுத்தலாம், நடு ஓவர்களில் பயன்படுத்தலாம், டெர்த் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். அப்படி ஒரு பந்துவீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

என்னை பொருத்தவரை அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் பவுலர். அதாவது ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளர். ஆகவே அவரை போன்ற ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். அவரை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய அனுபவம் எப்போதும் அணிக்கு கை கொடுக்கும். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 தொடர்களில் நிச்சயம் மீண்டும் இடம்பிடிப்பார்” எனக் கூறியுள்ளார். 


மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு வருகிறாரா அஸ்வின்?- மனம்திறந்த புதிய கேப்டன் ரோகித் சர்மா

ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் 4 ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை. முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற  டி20 உலகக் கோப்பை தொடரில் 4ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆகவே அதேபோன்று ரோகித் சர்மா தலைமையிலான புதிய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலேயே அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க: ஐபிஎல் சூதாட்டம் - ரூ. 100 கோடி கேட்ட தோனி வழக்கு ஒத்திவைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget