மேலும் அறிய

IND vs WI 3rd T20: வெ.இண்டீஸ்க்கு எதிராக சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மாவின் சரவெடி ஆட்டம்; மூன்றாவது டி20 போட்டியை வென்ற இந்தியா

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மிகவும் நிதானமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பவர்ப்ளேவில் தடுமாற்றத்துடனே விளையாடியது. இதனால் பவர்ப்ளேவில் விக்கெட் எதையும் இழக்காமல் 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி கொஞ்சம் கியரை அதிரடிக்கு மாற்ற, அதனால் இந்திய அணிக்கு விக்கெட்டுகள் ஈஸியாக கிடைத்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 55 ரன்களில் இருந்தபோது இழந்தது. இந்தபோட்டியின் முதல் விக்கெட்டாக அக்‌ஷ்ர் படேல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் மேயர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் இந்திய அணியின் குல்தீப் யாதவ் அடுத்த மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக போட்டியின் 15வது ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரனும் ஐந்தாவது பந்தில் பிரண்டன் கிங்கும் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 

அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி குல்தீப் பந்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்து ரன்களை சேகரித்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாவல் 40 ரன்களும், பிரண்டன் கிங் 42 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 

அதன் பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பாக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை முதல் ஓவரில் ஒரு ரன் எடுத்த நிலையில் இழந்து வெளியேறினார். 

அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில்லுடன் இணைந்து இந்திய அணிக்கு நம்பிக்கையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். கில் 6 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் மட்டும் தனது ருத்ர தாண்டவ ஆட்டத்தினை நிறுத்தவில்லை. சூர்யாவுடன் இணைந்த திலக் வர்மா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒருபுறத்தில் சூர்ய குமார் யாதவ் பவுண்டரிகளை அசால்ட்டாக அடித்து வந்தார். 

44 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்ஸர் என 83 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் சூர்ய குமார் யாதவ். அதன் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமான ஆட்டத்தினை ஆட, திலக் வர்மா மட்டும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முயற்சி செய்துவந்தார். 

இறுதியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.  இறுதிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 49 ரன்களும் ஹர்திக் பாண்டியா ரன்களும் அடித்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை இன்னும் உயிர்ப்பில் வைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் உள்ளது. தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Low Budget SUV: 10 லட்சம்தான் பட்ஜெட்.. சொகுசான SUV கார் இதுதான்! மஹிந்திரா முதல் டாடா வரை!
Low Budget SUV: 10 லட்சம்தான் பட்ஜெட்.. சொகுசான SUV கார் இதுதான்! மஹிந்திரா முதல் டாடா வரை!
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget