![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
IND vs SA 2nd Test: படு சொதப்பல்.. இப்படியுமா அவுட் ஆவார்கள்? முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பேரிடி
இந்தியாவுக்கு எதிரான் இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
![IND vs SA 2nd Test: படு சொதப்பல்.. இப்படியுமா அவுட் ஆவார்கள்? முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பேரிடி IND vs SA 2nd Test First Time Six Wickets Fallen on Same Score in Test innings India vs South Africa IND vs SA 2nd Test: படு சொதப்பல்.. இப்படியுமா அவுட் ஆவார்கள்? முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பேரிடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/1997a4dd3ce59d207c6247047044d49b1704294481717102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி அதிகப்படியான ரன் குவிப்பில் ஈடுபட்டு, தென்னாப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்து இன்னிங்ஸ் வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
தொடக்கம் இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும் அதன் பின்னர் வந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணி எடுத்த 55 ரன்களை எளிதில் கடந்து ரன்கள் சேர்க்கத்தொடங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் ரோகித் சர்மா நிதனமாக விளையாடினார். 50 பந்துககளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் விளாசி 39 ரன்கள் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த விராட் கோலி அரைசதத்தை நோக்கி முன்னேறி வந்தார்.
ஆனால், அடுத்ததாக களம் இறங்கிய ஸ்ரேய்ஸ் ஐயர் ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் கேல்.எல்.ராகுல் 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா, பும்ரா, சிராஜ், கிருஷ்ணா, ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 46 ரன்களில் தனது விக்கெட் இழந்து வெளியேறினார். இந்திய அணி 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை 153 ரன்களுக்கே இழந்தது. குறிப்பாக கடைசி 11 பந்துகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ராபாடா, இங்கிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)