மேலும் அறிய

World Cup 2023: "தோனியை மிஸ் பண்றோம்.. இதை ஏத்துக்கவே முடியல” .. இந்திய அணி தோல்வி குறித்து ரசிகர்கள் புலம்பல்..!

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி தள்ளியுள்ளனர். 

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி தள்ளியுள்ளனர். 

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய 15வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (நவம்பர் 19) முடிவடைந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் அனைத்தும் சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, தர்மசாலா, அஹமதாபாத், புனே, லக்னோ, டெல்லி ஆகிய 10 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. 

இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன்மூலம் 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று அந்த அணி சாதனைப் படைத்தது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ஆடிய 10 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் எதிர்பாராத தோல்வி இந்திய அணி வீரர்களை மட்டுமல்லாமல், மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபக்கம் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், மறுபக்கம் இப்படி ஒரு தோல்வியை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

    • ஒரு ரசிகர், ‘10 போட்டிகளிலும் ஜெயித்ததால் இந்த போட்டியையும் ஜெயித்து விடுவார்கள் என நினைத்தேன். ஆனால் தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். 
    • இன்னொருவர், ‘இந்த நேரத்தில் நான் தல தோனியை மிஸ் பண்றேன். அவர் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது’ என கூறினார். 
  • ஒரு சிறுவன், ‘இந்த மேட்ச் தோற்றதுக்கு காரணமே தோனி இல்லாதது தான். அவர் இருந்திருந்தா நொறுக்கிருப்பாரு” என தனது குமுறலை பதிவு செய்தான்
  • இளம் ரசிகர் ஒருவர், ‘மனதுக்கு கஷ்டமா இருக்கு. நல்லாதான் விளையாடினார்கள். அதை பாராட்டுகிறேன். ஆனால் தோல்வி ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். 
  • நான் லீவு போட்டு வந்ததுக்கு இந்திய அணி இப்படி ஏமாத்திட்டாங்களே என மெரினா கடற்கரையில் போட்டியை பார்க்க வந்த ஒருவர் புலம்பியுள்ளார்
  • ரசிகை ஒருவர், ‘ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் கடினமாகத்தான் போட்டி சென்றது. ஆனால் நாங்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. நாங்க பவுலர்கள் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தோம். ஆனால் முடிவு வேற மாதிரி இருந்துச்சு” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget