மேலும் அறிய

பக்தர்களே! திருவண்ணாமலையில் இடது புறம் இருந்து வலதுபுறமாக கிரிவலம் வருவது ஏன்? இதுதான் காரணம்

திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது பக்தர்கள் இடது புறத்தில் இருந்து வலதுபுறம் ஏன் மலையைச் சுற்றிவருகின்றனர் என்பதை கீழே விரிவாக காணலாம்.

சிவபெருமானின் முதன்மை தலமாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அமாவாசை, பெளர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும், சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். 

கிரிவலம் உருவான வரலாறு:

திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏன் கிரிவலம் செல்கின்றனர்? இந்த கிரிவலம் எப்படி உருவானது? என்பதை கீழே விரிவாக காணலாம். 

கயிலையில் ஒரு முறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, அன்னை பராசக்தி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினார். இதனால், பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. இதனால், பிரபஞ்சத்தில் வசித்த அனைத்த ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகியது. 

இந்த பாவத்தை போக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் உள்ள கம்பை நதிக்கரையில் பார்வதி தேவி தவம் புரிந்தார். இதற்காக, சிவலிங்கத்தை வடிவமைத்து தனது தவத்தை தொடர்ந்தார். அப்போது, கம்பை நதியில் வெள்ளம் உண்டானது. இந்த வெள்ளத்தில் சிவலிங்கம் கரையாமல் இருப்பதற்காக சிவலிங்கத்தை தனது மார்போடு அணைத்தார் பார்வதி தேவி. அப்போது, தேவியின் பாவத்தை போக்கினார் சிவபெருமான். 

இடப்புறம் சுற்றி வந்த பார்வதி தேவி:

மேலும், தாங்கள் எப்போதும் எனை பிரியாமல் இருக்க தங்களது திருமேனியில் இடது புறம் எனக்கு தர வேண்டும் என்று வேண்டினார். அதற்கு திருவண்ணாமலை சென்று தவம் புரியுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். ஈசனின் கட்டளைக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலைக்குச் சென்று தவம் புரிந்துள்ளார். 

பார்வதி தேவி தவம் செய்யும்போது, பெளர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி உண்டாகும். அந்த  நன்னாளில் மலையை இடதுபுறம் சுற்றிவா என்ற அசரிரீ ஒலி கேட்டுள்ளது. 

அர்த்த நாரீஸ்வரர்:

அந்த அசரீரிக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலையை இடது புறமாக உலா வந்து கிரிவலம் வந்தார். மலையை இடது புறமாக கிரிவலத்தை நிறைவு செய்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தனது இடது பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இவ்வாறே கிரிவலம் உருவானதாக புராணங்கள் கூறுகிறது. இதன்காரணமாக கிரிவலத்தை பக்தர்கள் திருவண்ணாமலை மலையை இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சுற்றி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் உலா வருவதால் தங்களது பாவங்கள் நீங்குவதுடன், ஏராளமான நன்மைகளை அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, சித்ரா பெளர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நன்னாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனத்திற்காக குவிகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget