மேலும் அறிய

பக்தர்களே! திருவண்ணாமலையில் இடது புறம் இருந்து வலதுபுறமாக கிரிவலம் வருவது ஏன்? இதுதான் காரணம்

திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது பக்தர்கள் இடது புறத்தில் இருந்து வலதுபுறம் ஏன் மலையைச் சுற்றிவருகின்றனர் என்பதை கீழே விரிவாக காணலாம்.

சிவபெருமானின் முதன்மை தலமாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அமாவாசை, பெளர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும், சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். 

கிரிவலம் உருவான வரலாறு:

திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏன் கிரிவலம் செல்கின்றனர்? இந்த கிரிவலம் எப்படி உருவானது? என்பதை கீழே விரிவாக காணலாம். 

கயிலையில் ஒரு முறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, அன்னை பராசக்தி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினார். இதனால், பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. இதனால், பிரபஞ்சத்தில் வசித்த அனைத்த ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகியது. 

இந்த பாவத்தை போக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் உள்ள கம்பை நதிக்கரையில் பார்வதி தேவி தவம் புரிந்தார். இதற்காக, சிவலிங்கத்தை வடிவமைத்து தனது தவத்தை தொடர்ந்தார். அப்போது, கம்பை நதியில் வெள்ளம் உண்டானது. இந்த வெள்ளத்தில் சிவலிங்கம் கரையாமல் இருப்பதற்காக சிவலிங்கத்தை தனது மார்போடு அணைத்தார் பார்வதி தேவி. அப்போது, தேவியின் பாவத்தை போக்கினார் சிவபெருமான். 

இடப்புறம் சுற்றி வந்த பார்வதி தேவி:

மேலும், தாங்கள் எப்போதும் எனை பிரியாமல் இருக்க தங்களது திருமேனியில் இடது புறம் எனக்கு தர வேண்டும் என்று வேண்டினார். அதற்கு திருவண்ணாமலை சென்று தவம் புரியுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். ஈசனின் கட்டளைக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலைக்குச் சென்று தவம் புரிந்துள்ளார். 

பார்வதி தேவி தவம் செய்யும்போது, பெளர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி உண்டாகும். அந்த  நன்னாளில் மலையை இடதுபுறம் சுற்றிவா என்ற அசரிரீ ஒலி கேட்டுள்ளது. 

அர்த்த நாரீஸ்வரர்:

அந்த அசரீரிக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலையை இடது புறமாக உலா வந்து கிரிவலம் வந்தார். மலையை இடது புறமாக கிரிவலத்தை நிறைவு செய்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தனது இடது பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இவ்வாறே கிரிவலம் உருவானதாக புராணங்கள் கூறுகிறது. இதன்காரணமாக கிரிவலத்தை பக்தர்கள் திருவண்ணாமலை மலையை இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சுற்றி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் உலா வருவதால் தங்களது பாவங்கள் நீங்குவதுடன், ஏராளமான நன்மைகளை அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, சித்ரா பெளர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நன்னாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனத்திற்காக குவிகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget