மேலும் அறிய

வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு; பரவசத்தில் பக்தர்கள் - எங்கு தெரியுமா?

சின்னமனூர் அருகே வருடத்திற்கு ஒரு முறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

குல தெய்வ வழிபாடு

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் விசேசமான மிகவும் பிரிசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள குல தெய்வ வழிபாடு என்பது அப்பகுதிகளில் பல்வேறு சிறப்புகளும் தனித்துவத்தையும் பெற்றுள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படும். எடுத்துக்காட்டாக மதுரை அழகர் கோவில் திருவிழா, தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா, தேனி வீரப்ப ஐயனார் திருக்கோவில் என பல்வேறு கோவில்கள் உள்ளது.


வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு; பரவசத்தில் பக்தர்கள் - எங்கு தெரியுமா?

சித்ரா பெளர்ணமி நிகழ்வு

குறிப்பக சித்ரா பெளர்ணமி நாளன்று ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டுமல்லாமல் அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களிலும் குலதெய்வ வழிபாடு என்பது நடந்து வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் தனி ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் அம்மன் தேனி மாவட்டம் வருச நாடு பகுதியில் உள்ள கொம்பு குத்தி ஐயனார் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் உறவு முறை தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஐயனார் அண்ணனாகவும் சூடம்மாள் தங்கையாகவும் இருந்து குல தெய்வங்களாக அருள் பாலித்து வருகின்றனர்.


வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு; பரவசத்தில் பக்தர்கள் - எங்கு தெரியுமா?

சிறப்பு பூஜைகள்

புரட்டாசி மாதத்தில் இக்கோவிலில் பங்காளிகள் ஒன்றுகூடி அம்மனுக்கு கரகம் எடுத்து பூஜை பெட்டி அலங்கரித்து திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோவிலில் நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜ கோபுரம் எழுப்பப்பட்டது. அதன் பிறகு கும்பாபிஷேக விழாவும் நடத்தப்பட்ட நிலையில் அந்த வருடத்திலிருந்து, வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி வார நாட்களில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருட சித்ரா பௌர்ணமி விழா வார நாட்களான இன்று சூரிய ஒளி அம்மன் மீது படும் அரிய வகை நிகழ்ச்சி நடைபெற்றது.


வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு; பரவசத்தில் பக்தர்கள் - எங்கு தெரியுமா?

சூரிய ஒளி அம்மனை வழிபடும் நிகழ்வு

அம்மனின் தலை உச்சியில் படும் சூரிய ஒளிக்கதிர் மெல்ல மெல்ல நகர்ந்து கால், பாதம் வரை இடம் பெறும். இந்த அரிய வகை நிகழ்ச்சியை பக்தர்கள் மெய் மறந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமான பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடந்து சாமிக்கு அதிகப்படியான பூக்கள் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக சூரிய ஒளிபடும் நேரங்களில் வேண்டிய வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றித் தருவதாக கலந்து கொண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.   விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னதானத்தை வழங்கினார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Embed widget