மேலும் அறிய

கரூர் : ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இத்தனை சிறப்புகளா? கோவிந்தா கோஷத்துடன் தரிசித்த பக்தர்கள்

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்

புரட்டாசி மாதம்.. பெருமாள் வழிபாடு அதிகமாகும் இந்த வேளையில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வெண்ணைமலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் அதிகாலையில் நடைபெற்றது.


கரூர் : ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இத்தனை சிறப்புகளா? கோவிந்தா கோஷத்துடன் தரிசித்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் சனிக்கிழமை முதல் ஆன்மீக பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். புரட்டாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆலயத்தை சுற்றியுள்ள யாதவர் விஷ்வகர்மா சமுதாய மண்டபங்களில் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சுமார் 100க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தினர்.

தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி உளுந்து, பயிறு வகைகள் நவதானியம், நெல், அரிசி மற்றும் உணவு தானியங்களை பொதுமக்களுக்கும் தர்மமாக வழங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

வெண்ணைமலை:

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் ஆத்ம நேச ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முன்னிட்டு ஹனுமன் மூலிகைகள், மலர் மாலைகள் படைத்து சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய சிறப்பு பிரார்த்தனையும், கட்டு மந்திரமும், அபிஷேக வழிபாடும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அனுமன் அருள்பெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் ஜெயராம் மற்றும் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


கரூர் : ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இத்தனை சிறப்புகளா? கோவிந்தா கோஷத்துடன் தரிசித்த பக்தர்கள்

கடவூர் அருகே வாயுபுத்திர ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசியை ஒட்டி வெண்ணையால் அலங்காரம் செய்யப்பட்டு சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்தக் கோவிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும், சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பௌர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இக்கோவிலில் புரட்டாசியை ஒட்டி பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆஞ்சநேயருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம், வெற்றிலை, துளசி ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget