மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் தீமிதி உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோவில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

அதில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தீமிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதியன்று நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

அதனையடுத்து தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபா ஆராதனை நடைபெற்று, இரவில் அம்மன் வீதியுலா  காட்சியும் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான நேற்று நடைபெற்ற தீமிதி திருவிழாவை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மாலை மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன்  உலா வரும் காட்சி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட விரதம் இருந்த 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள அம்மன் குளத்தில் புனித நீராடி, சக்தி கரகம் முன் செல்ல காவடி, அலகு காவடி எடுத்து வந்து கோயிலின் முன்புறம் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு மற்றும் உருவ பொம்மைகள் வாங்கி வைத்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான  காவல்துறையினர் செய்திருந்தனர்.

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவம் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற இரட்டை காளியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனையும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி திருவிழாவையொட்டி  பக்தர்கள் சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை  சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை  காட்டப்பட்டது. மாலை விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதி மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
Embed widget