மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் தீமிதி உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோவில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

அதில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தீமிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதியன்று நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

அதனையடுத்து தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபா ஆராதனை நடைபெற்று, இரவில் அம்மன் வீதியுலா  காட்சியும் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான நேற்று நடைபெற்ற தீமிதி திருவிழாவை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மாலை மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன்  உலா வரும் காட்சி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட விரதம் இருந்த 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள அம்மன் குளத்தில் புனித நீராடி, சக்தி கரகம் முன் செல்ல காவடி, அலகு காவடி எடுத்து வந்து கோயிலின் முன்புறம் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு மற்றும் உருவ பொம்மைகள் வாங்கி வைத்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான  காவல்துறையினர் செய்திருந்தனர்.

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவம் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற இரட்டை காளியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனையும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் களைகட்டும் ஆடி மாத திருவிழாக்கள்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி திருவிழாவையொட்டி  பக்தர்கள் சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை  சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை  காட்டப்பட்டது. மாலை விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதி மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Fortuner Rival: 5 வருடங்களுக்குப் பிறகு கம்பேக் - ஃபார்ட்சுனர் மீது பந்தயம் அடிக்குமா புது எஸ்யுவி? ஆஃப்-ரோட் சகாக்கள்
5 வருடங்களுக்குப் பிறகு கம்பேக் - ஃபார்ட்சுனர் மீது பந்தயம் அடிக்குமா புது எஸ்யுவி? ஆஃப்-ரோட் சகாக்கள்
Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
“உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
Motorcycle Reserve Fuel: ஒரு பைக் ரிசர்வ்-ல எவ்வளவு தூரம் பயணிக்கும்.? அதனால எஞ்சினுக்கு பிரச்னை வருமா.? தெரிஞ்சுக்கோங்க
ஒரு பைக் ரிசர்வ்-ல எவ்வளவு தூரம் பயணிக்கும்.? அதனால எஞ்சினுக்கு பிரச்னை வருமா.? தெரிஞ்சுக்கோங்க
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
Embed widget