மேலும் அறிய

கார்த்திகை பௌர்ணமி: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 'சிவாய நம' மந்திரம் முழங்க பக்தி பரவசத்தில் பக்தர்கள் கிரிவலம்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க சிவாய நம ஓம் என்ற மந்திரங்கள் முழங்க கோயிலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அதன் தொன்மை, கட்டிடக்கலை மற்றும் புராணப் பின்னணி காரணமாக இந்து சமயத்தில் தனிச்சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு வெகுவிமரிசையாக நடைபெற்ற கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மூன்று நிலைகளில் அருளும் இறைவன் 

இக்கோயில் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுடன், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் சுயம்பு லிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் வடிவில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தின் தனித்துவமே, சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதுதான். ஒவ்வொரு நிலையும் பக்தர்களுக்கு ஒரு தனிப்பட்ட பலனைக் கொடுக்கிறது.

* பிரம்மபுரீஸ்வரர்: முதல் நிலையில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

* தோனியப்பர்: பிரளய காலத்தில் சிவபெருமான் தோணியில் வந்ததாக ஐதீகம் உள்ளதால், மலைமீது உமாமகேஸ்வரராகக் காட்சியளிக்கிறார்.

* சட்டைநாதர்: இக்கோயிலின் மூலவர் அல்லாத, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவராக வழிபடப்படும் இவர், சட்டச் சிக்கல்கள், எதிரிகள் தொல்லைகள், பில்லி, சூனியம் போன்ற தீவினைகளை நீக்கிப் பாதுகாப்பு அளிப்பவராக நம்பப்படுகிறார்.

திருஞானசம்பந்தர் வரலாறு 

மேலும், சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து, இங்குள்ள அம்பாளிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளியது இந்தத் தலத்தில்தான். அவருக்கு இங்கு தனி சன்னதியும் உள்ளது.

22 தீர்த்தங்கள் மற்றும் அஷ்ட பைரவர் சன்னதி

இக்கோயிலில் பிரம்ம தீர்த்தம் உட்பட மொத்தம் 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இத்தனை தீர்த்தங்கள் கொண்ட சில சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

அனைத்துச் சிறப்புகளுக்கும் மணிமகுடமாக, இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் (எட்டு பைரவர்கள்) காசிக்கு இணையாக ஒரே ஸ்தலத்தில் அருள்பாலிக்கின்றனர். இதனால், இந்தத் தலம் பைரவ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செல்வம் மற்றும் செழிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றது.

பௌர்ணமி கிரிவலம்

இத்தகைய மகத்தான சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற மாதமான கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு இன்று டிசம்பர் 04 -ம் தேதி கிரிவலம் நடைபெற்றது. கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து தொடங்கிய இந்த பக்திப் பயணம், கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

கிரிவலத்தின்போது பக்தர்கள் வழியில் உள்ள ஆபத்து காத்த விநாயகர், சொர்ணாகர்ஷன பைரவர் சன்னதிகள் உட்பட அனைத்துக் கோயில்களிலும் சூடம் ஏற்றி வழிபட்டனர். வழிநெடுகிலும் பக்தர்கள் "சிவாய நம ஓம்" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சென்றது, பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.

சட்டச் சிக்கல்கள், எதிரிகள் தொல்லைகள் நீங்க சட்டைநாதர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி, நாள்தோறும் அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் உட்படப் பொதுமக்களும் இக்கோயிலில் திரளாக வந்து வழிபாடு செய்து செல்வது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Embed widget