மேலும் அறிய

Chithirai Festival: "பூ பல்லக்கில் அழகர்" : மதுரையில் இருந்து விடைபெற்றார் சித்திரைப் பெருவிழா நாயகன்!

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முடிந்து பூபல்லக்கில் எழுந்தருளி மக்களிடம் இருந்து விடைபெற்றார் அழகர்.

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோயிலுக்கு கிளம்பினார்.

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கும் வருவது தான் அழகரின் மதுரை பயண நோக்கம்.

அதன்படி, கள்ளழகர் கோலத்தில் மக்கள் வெள்ளத்தில் ஏப்ரல் 21ம் தேதி இரவு அழகர் கோயிலில் இருந்து கிளம்பி 20 கிலோ மீட்டர் பயணித்து மதுரை வந்தவரை, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.

ஏப்ரல் 23ம் தேதி அதிகாலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு லட்சக்கணக்கான மக்கள் சூழ தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அன்று மதியம் ராமராயர் மண்டகப்படியில் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்த்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஏப்ரல் 24ம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பின், அன்றிரவு ராமராயர் மண்டகபடியில் தசாவதார காட்சி அளித்தார்.

இன்று (ஏப்ரல் 26) அதிகாலை கள்ளர் திருக்கோலம் ஏற்று தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.

அழகர் கோயில் முதல் மதுரை வரையிலான பயணத்தின் போது வழியெங்கும் 480க்கும் மேற்பட்ட மண்டக படிகளில் எழுந்தருளிய அழகர், மீண்டும் கோயில் நோக்கி செல்லும் வழியிலும் மண்டகபடிகளில் எழுந்தருளி நாளை (ஏப்ரல் 27) காலை அழகர்கோயிலை சென்றடைவார்.

மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா. அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்பட்டது. எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை கொண்ட இவ்வகையான மக்களே, எங்கும் நிறைந்து சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டினார்கள்.

மக்களை தேடி வந்து, எந்தவித பேதமுமில்லாமல் மக்கள் அனைவரையும் சேர்த்து, அவர்களுடன் இருந்து, அவர்கள் அளித்த உணவை உண்டு, அவர்களின் கொண்டாட்டங்களில் பூரித்த கள்ளழகர், மக்களிடமிருந்து பிரியாவிடை பெறுகையில் உணர்ச்சிப் பெருக்கோடு அவரை மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget