மேலும் அறிய

பக்தர்களே.. நாளை வைகாசி பெளர்ணமி! வீட்டில் பணக்கஷ்டம் தீர இதை மட்டும் செய்யுங்க..

வைகாசி பெளர்ணமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வீட்டில் பணக்கஷ்டம் தீர எப்படி வழிபட வேண்டும் என்பதை கீழே காணலாம்.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாள் இன்று கோலாகலமாக உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நாளை வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமி வருகிறது. பொதுவாக வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரமும், பெளர்ணமி நாளும் ஒன்றாகவே வரும். 

வைகாசி பெளர்ணமி:

ஆனால், நடப்பாண்டில் வைகாசி விசாகத்திற்கு அடுத்த நாளே பெளர்ணமி வருகிறது. நாளை காலை அதாவது ஜுன் 10ம் தேதி மதியம் 12.27 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை அதாவது நாளை மறுநாள் (ஜுன் 11ம் தேதி) மதியம் 1.53 மணி வரை பெளர்ணமி திதி வருகிறது. 

பொதுவாக ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது இருக்கும் திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பெளர்ணமி தியைப் பொறுத்தமட்டில் மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் பெளர்ணமி திதி பிறக்கும் நாளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.   

துர்கை அம்மனை வழிபடுவது எப்படி?

நாளை வரும் வைகாசி பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் செவ்வாய் கிழமையில் வரும் இந்த பெளர்ணமி துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளில் வருகிறது. இந்த பெளர்ணமி நன்னாளில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், வீட்டில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய விரும்புபவர்கள் துர்கை அம்மனுக்கு சிவப்பு நிற பட்டாடை உடுத்தியும், செவ்வரளி சாற்றியும் வழிபடுவது சிறப்பு ஆகும். 

இவ்வாறு வழிபடுவதால் திருமணம் கூடிய சீக்கிரம் கைகூடி வருவதுடன், வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பதே ஆகும். மேலும், இந்த செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் முருகனை வணங்கினாலும் விரும்பியவரை திருமணம் செய்யலாம். 

எந்த தெய்வத்தை வணங்குவதால் என்ன நன்மைகள்?

இந்த வைகாசி பெளர்ணமியில் சிவபெருமானை சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும். மேலும், சிவாலயங்களில் விளக்கேற்றுவதால் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும். 

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த செவ்வாயில் வரும் வைகாசி பெளர்ணமியில் கோயிலுக்கு முருகனை வணங்குவதால் விரும்பியவரை மணம் முடிக்கலாம். வீட்டில் நிலவும் துன்பங்கள் நீங்கி, தானிய மற்றும் செல்வ வளம் உண்டாகும். இந்த பெளர்ணமி நாளில் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும். 

நட்சத்திரங்கள்:

திருமணம் மற்றும் வேலையில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் மற்றும் மேஷம், விருச்சிக ராசியினர் வைகாசி பெளர்ணமி நாளில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு ஆகும்.

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget