மேலும் அறிய

ஐப்பசி மாத கிருத்திகை பூஜை - ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜை.

அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை முன்னிட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் அருகே குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை முன்னிட்டு அழகன் முருகனுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


ஐப்பசி மாத கிருத்திகை பூஜை - ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

அதைத் தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, கையில் வேலுடன் வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அழகன் பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை பூஜை.

கரூர், அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


ஐப்பசி மாத கிருத்திகை பூஜை - ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

 

அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆலயத்தின் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


கிருஷ்ணாயபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத கிருத்திகை பூஜை.

கரூர் மாவட்டம், அருள்மிகு ஸ்ரீ தண்டாயுத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத கீர்த்தியை முன்னிட்டு மூலவர் தண்டாயுத சுவாமிக்கும் உற்சவர் முருகப் பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், விபூதி, அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


ஐப்பசி மாத கிருத்திகை பூஜை - ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் மூலவர் தண்டாயுதபாணி உற்சவர் முருகப்பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் நடைபெற்ற ஐப்பசி மாத கிருத்திகை பூஜையை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
வேண்டுதல் நிறைவேறினால் சிமெண்ட் பொம்மை நேர்த்திக்கடன்... 3,000-க்கும் மேற்பட்ட சிலைகளால் புகழ் பெற்ற அழகு முத்து அய்யனார் கோயில்!
வேண்டுதல் நிறைவேறினால் சிமெண்ட் பொம்மை நேர்த்திக்கடன்... 3,000-க்கும் மேற்பட்ட சிலைகளால் புகழ் பெற்ற அழகு முத்து அய்யனார் கோயில்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
Embed widget