Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபத் திருவிழா வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும், எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும், எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்

Karthigai Deepam 2024: தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு கோயில்களில் விமர்சையாக தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கார்த்திகை தீபம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களிலும் சிறிய அளவில் தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது என பல்வேறு வகைகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன ?
திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும். திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும், சிவபெருமான் நமது வீடுகளிலும் ஜோதி வடிவாக காட்சி தருவது, ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
விளக்கு ஏற்றுவது எப்படி ?
பிற நாட்களில் பல்வேறு திரிகளை பயன்படுத்தி நாம் வீடுகளில் விளக்கேற்றினாலும், திருக்கார்த்திகை தீபத்தன்று, வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி அல்லது தூய காட்டன் திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது மிக உத்தமகமாக பார்க்கப்படுகிறது. தாமரை மற்றும் வாழைத்தண்டு திரி கிடைக்காதவர்கள் தூய காட்டன் திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
எந்த எண்ணெயை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் ?
பசு நெய்யால் விளக்கேற்றினால் - மனம் ஒருமித்த வளமான வாழ்வு, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் - செல்வ வளம் செழிக்கும். விளக்கெண்ணெய் விளக்கேற்றினால் - புகழ் சேரும், வேப்ப எண்ணெய் விளக்கேற்றினால் - கணவன் மனைவி ஒற்றுமை.தேய்காய் எண்ணெய் - குலதெய்வ அருள், இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் - ஐஸ்வரியும் பெருகி, வீட்டில் மன நிம்மதி ஏற்படும்.
எவ்வளவு விளக்குகள் ஏற்ற வேண்டும் ? எவ்வளவு நேரம் ஏற்ற வேண்டும் ?
இன்று பல்வேறு விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் கார்த்திகை தீபத்தன்று கையால் செய்யப்பட்ட அகல் விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 3 அகல் விளக்காவது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீடுகளில் குறைந்தபட்சம் 27 விளக்குகளை ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தின் மீது கண்டிப்பாக ஒரு விளக்கு ஏற்றி இருக்க வேண்டும். ( கோலத்தின் மீது ஐந்து முக குத்துவிளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது ). குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் அகல்விளக்குகள் எரிவதை முடிவு செய்ய வேண்டும். அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வசதிக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்றலாம் ?
கிழக்கு திசையை நோக்கி விளக்குகளை ஏற்றினால் துன்பங்கள் நீங்கும். வடக்கு திசையை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியை கொடுக்கும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவது கடன் தொல்லைகளை நீக்கி செல்வத்தை கொடுக்கும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி தீபங்கள் ஏற்றப்படக்கூடாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

