மேலும் அறிய

Kanchipuram Chitragupta Temple : சித்ரா பெளர்ணமியில் ஏன் சித்திரகுப்தர் வழிபாடு? காஞ்சிபுர கோயிலும், அதன் சிறப்பும்..

பாவங்களைப் போக்கும் சித்திரகுப்தர்.. காஞ்சிபுர கோயிலும், அதன் சிறப்பும் தெரிந்துகொள்ளலாம் வாங்க மக்களே..

இந்து மதத்தில் சித்திரகுப்தர்  ( Shri Chitragupta Swamy Temple )

இந்து மத நம்பிக்கையில், எமதர்மன் முக்கிய அங்கம் வகிக்கிறார் . இந்துவாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  பூலோகத்தில் அவர் செய்யும் பாவம் புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு  சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை.  இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு,  சித்திரகுப்தர் உடையது என்பது நம்பிக்கையாக உள்ளது

 புராணங்கள் கூறுவது என்ன ?

புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும்,  நல்லொழுக்கமும்  தர்மமும்  அதிகம் இருக்க வேண்டும்.  குற்றச் செயல்களில்   ஈடுபடுவதையும்   ஈடுபவர்களும்,  நற்செயல்கள்   செய்பவர்களையும் கண்காணிக்க  யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை  முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில்  சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார்  எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.  இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது.   சித்திரத்திலிருந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என  பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து,  சித்திரகுப்தரிடம்  மக்களின்  பாவ புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம்.  இதனை தொடர்ந்து  எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார்  என்பது  புராண கால நம்பிக்கையாக உள்ளது.


Kanchipuram Chitragupta Temple : சித்ரா பெளர்ணமியில் ஏன் சித்திரகுப்தர் வழிபாடு? காஞ்சிபுர கோயிலும், அதன் சிறப்பும்..

காஞ்சிபுரம் சித்திரகுப்தர்  கோயில் ( Kanchipuram Chitragupta Temple )

 வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய  கடவுளாக பார்க்கப்படும்  சித்தரகுப்தருக்கு  உலகில் எங்கும் கோவில் கிடையாது.  ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சுமார்  ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.  

தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.  1911-ஆம் ஆண்டு  கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள்  ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. 

கோவில் அமைவிடம்

சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.  தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால்  நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது  ஐதீகமாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு  அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும்  தீமையிலிருந்து  பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள்  சித்தரகுப்தரை வணங்கி வந்தால்,  வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை

சித்ரா பௌர்ணமி

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர். சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக  நம்பிக்கை உள்ளது.  எனவே இந்த நன்னாளில்  சித்திரகுப்தரை வணங்கினால்  அனைத்து பாவங்களிலிருந்தும் விடிவு பிறந்து,  ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது   நம்பிக்கையாக உள்ளது.

ALSO READ | Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Ashleigh Gardner: அடிச்சா சிக்ஸரு! ஆர்சிபியை அலறவிட்ட ஆஷ்லே கார்ட்னர்! 202 ரன்களை எட்டுமா மந்தனா படை?
Ashleigh Gardner: அடிச்சா சிக்ஸரு! ஆர்சிபியை அலறவிட்ட ஆஷ்லே கார்ட்னர்! 202 ரன்களை எட்டுமா மந்தனா படை?
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Trichy-Bahrain Flight:  திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? -  விரைவில் வருதாம் புதிய விமான சேவை
திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
969 வீடுகள்... மெதுவா... மெதுவா நடக்கும் பணிகள்... எப்போ முடியும்..? - புலம்பும் மக்கள்
969 வீடுகள்... மெதுவா... மெதுவா நடக்கும் பணிகள்... எப்போ முடியும்..? - புலம்பும் மக்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.