![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!
kanchipuram Adhi kamakshi Temple: ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
![kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..! kanchipuram adhi kamakshi temple festival held on today tnn kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/92a116c4d3af098fc33a0a907ab9cfc71718243491874739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி
காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஶ்ரீ ஆதி காமாட்சி அம்மன் என்னும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கின. இதனை தொடர்ந்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க் குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
![காஞ்சிபுரம் மடம் சங்கராச்சாரியார் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/cc46054c590948b1d66bf8beff12fc041718243216257739_original.jpg)
சிறப்பு அபிஷேகம்
இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன .
கும்பாபிஷேகத்தில் நினைவு நாள் இன்று இரவு ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் பூக்கடை சத்திரம், பேருந்து நிறுத்தும், கட்சபேஷ்வரர் கோவிலில் வழியாக நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்
பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது . கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .
கோயில் சிறப்பு அம்சம்
இக்கோயில் விஷ்வகர்மா சமுதாய மக்கள் அதற்காக போற்றப்பட்டு வருகிறது. இக்கோயில் அருகே கம்பளத்தெரு அமைந்துள்ளது. அதேபோன்று கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி, ஆதிசங்கர ஆகியோருக்கு தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.
கோயிலில் சிவலிங்கத்தில் பானம் எனப்படும் ருத்ர பாகத்தில் இறைவியின் அமர்ந்த கோலமும் காணப்படுவது சிறப்பம்சமாகும். அம்பாள் தனது கரங்களில் உடுக்கை, சூலம் , கபாலம் ஆகியவற்றை தாங்கிக் காய்ச்சியிருக்கிறார். பிற கோவில்களில் இது போன்ற வடிவில் காணக் கிடைக்காதது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த வடிவை சக்தி லிங்கம் என அழைக்கின்றனர்.
அர்த்தநாரீஸ்வர லிங்கம்
இந்த லிங்கத்திற்கு சக்தி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருமணம் தடை நீங்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சக்தி லிங்கத்திற்கும் ஆதி காமாட்சி விளக்கும் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பிரிந்து தம்பதிகள் மீண்டும் இணையவும் திருமணமானவர்கள் ஒற்றுமையாக வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நெய்வேதியும், செய்து வணங்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)