Actor Arjun: அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயில்.. இப்படி ஒரு சிறப்பு இருக்கா.. மிஸ் பண்ணாதீங்க!
தீவிர அஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் ஒரே கல்லினால் ஆன அமர்ந்த நிலையில் இருக்கும் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை கொண்ட கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

தன்னுடைய ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கும் சிலைக்கான கல்லை தேடி ஒன்றரை ஆண்டுகள் அலைந்ததாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜூன். தீவிர அஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் இருக்கும் பாரதி நகரில் ஒரே கல்லினால் ஆன அமர்ந்த நிலையில் இருக்கும் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை கொண்ட கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 200 டன் எடை கொண்டது. கடந்த 2021ம் ஆண்டு இந்த கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. நாள்தோறும் இந்த கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஜூன் இந்த கோயில் பற்றி கூறியுள்ளார். அதில், “சின்ன வயதில் இருந்தே அப்பா எங்களிடம் ராம் ராம் என சொல்லி வளர்த்தார். அதற்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு அடிப்படை வாஸ்து தெரியும். கோயிலில் ஆஞ்சநேயர் சிலை அமைந்திருக்கும் இடம் தேவ மூலை. இந்த கோயில் கட்டும்போது அந்த இடம் என்னிடம் இல்லை. அதற்கு உரிமையாளர் எனக்கு சொந்தக்காரர். அவரிடம் கேட்டபோது அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டார்கள். நான் இப்போது சிலை இருக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடம் கிடைத்தால் கடவுளுக்கு ஏதாவது செய்திருக்கலாம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
ஒரு 15 நாட்கள் கழித்து இந்த இடத்தை விற்கிறேன் என அதே உரிமையாளர் என்னிடம் கேட்டார். நான் அந்த இடத்தை வாங்கியதும் ஆஞ்சநேயர் சிலை வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் ஒரு கல்லில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது தான் 100 ஆண்டுகளுக்கு நின்று பேசும் என முடிவு செய்தேன். இந்த சிலைக்கான கல்லை தேடி கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் அலைந்தேன். என்னுடைய கோயிலில் பத்மாசன நிலையில் தான் ஆஞ்சநேயர் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
இந்த கோயிலின் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் தான் முடிவு செய்ததாக நினைக்கிறேன். பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டு வர 3 நாட்கள் ஆகிவிட்டது. சென்னைக்குள் கொண்டு வரும்போது சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் சரி செய்து கொடுத்தேன். இந்த ஆஞ்சநேயர் சிலை செய்ய 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஸ்பதிக்கு 360 கோணத்தில் போட்டோ எல்லாம் எடுத்து எந்த விஷயத்திலும் தவறு நடந்து விடக்கூடாது என நினைத்தேன்” என அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Also Read: கோயில்களில் முறைகேடு.. சாட்டையை சுழற்றும் அமைச்சர் ரமேஷ்.. அடுத்த நடவடிக்கை என்ன?
தேவ மூலை என்பது வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ஈசானி மூலையாகும். ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால் செல்வம் மற்றும் அறிவு ஆகியவை இணையும் இடமாக இது பார்க்கப்படுகிறது. இந்த மூலை எப்போதுமே தூய்மையாக இருக்க வேண்டும் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூலையில் இருக்கும் கடவுளை வணங்கும்போது வாழ்க்கையில் நம்முடைய துன்பங்கள் யாவும் விலகி இன்பங்கள், செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















