மேலும் அறிய

கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பிச்சாண்டவர் திருவீதி உலாவை முன்னிட்டு பிச்சாண்டவர்க்கு ஆலய மண்டபத்தில் என்னைக் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, அபிஷேக பொடி, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிச்சாண்டவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேல தாளங்கள் முழங்க பிச்சாண்டவர் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.


கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

 

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. மார்கழி மாத பிச்சாண்டவர் திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் உற்சவர் நடராஜர், விநாயகர், பாலமுருகன், அம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். 

 


கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

அதைத் தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் சுவாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு அன்னத்தால் அபிஷேகமும், பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அளித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற நடராஜர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

காளியம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை

தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சி நாக நோட்ட காரம்பட்டி பருவமழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்து இருத்தல், வேண்டி காளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தோகைமலை அருகே திருவாதிரை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சார்பாக மகா காளியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இத்திருவிளக்கு பூஜை ஆனது விழா குழுவினர்களின் ஏற்பாட்டின் படி அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு விழா குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர். அன்று முதல் இப்பகுதி பொதுமக்கள் எட்டு நாட்கள் விரதம் இருந்து வந்தனர். இதனை அடுத்து நேற்று திருவிளக்கு பூஜை தொடங்கியது.

இதில் பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்து முக பித்தளை குத்துவிளக்குகளை கொண்டு வந்திருந்தனர் பூஜை பொருட்கள் அனைத்தும் விழா குழுவினர்களால் வழங்கப்பட்டு பூஜையை நடத்தினார். இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக 108 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில் கல்வியில், சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை மாங்கல்யம் நீடித்திருத்தல், என வரம் கேட்டு குங்குமம் துளசி மலர் மஞ்சள் தானியம் போன்ற பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து, ஐம்பொருள் அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பூஜையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Embed widget