மேலும் அறிய

"தீசுக்கோ.. வேசுக்கோ” : இரத்தம் சொட்டச்சொட்ட நடந்த கத்தி போடுதல்: செளடாம்பிக்கை அம்மன் திருவிழாவில் திரண்ட பக்தர்கள்

ராஜ வீதி பகுதியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல் நிகழ்ச்சி இன்று நடந்தது.

கோவையில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை ராஜ வீதி பகுதியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. 


கத்தி போடுதல் என்பது தேவாங்கர் இன மக்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு சிறப்பு கலாச்சார சடங்கு நிகழ்வு ஆகும். இதில் பங்கேற்கும் ஆண்கள் புனித வாளால் "தீசுக்கோ, வேசுக்கோ” என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்வது வழக்கம். பூமார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி, ராஜ வீதியில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோவில் வரை நடந்தது. இந்த ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட பக்தர்கள் ”வேசுக்கோ,  தீசுக்கோ”  என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில்  வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தபடி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை  வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் திருமஞ்சன  பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம்சரியாகிவிடும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.

வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமி நாளன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். மேலும் பல்வேறு கோவில்களில் 'வித்யாரம்பம்' நடைபெறும். குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில், ’அ’ என்ற எழுத்தை எழுத கற்று கொடுப்பது வழக்கம்.


இதன் படி விஜயதசமி தினமான இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். பச்சரிசியில் குழந்தைகளின் கைகளை பிடித்து, ‘அ’ என்ற எழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர். இதையொட்டி அக்கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi Shivan Photo  : ராகுல் கையில் சிவன்! அப்செட்டான மோடி“ இந்துத்துவா உங்க சொத்தா?”A Raja parliament speech : ”தகுதி இல்லாத மோடி! அவருலாம் கடவுளா?வச்சு செய்த ஆ.ராசாDMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Embed widget