மேலும் அறிய

Joe Biden Diwali : வெள்ளை மாளிகையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தீபாவளி..

Diwali : தீபாவளியை ஒட்டி வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

வாஷிங்டன்: தீபாவளியை ஒட்டி  வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

"உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். இதுவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் முதல் பிரமாண்டமான தீபாவளி நிகழ்ச்சி. வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் இங்கு உள்ளனர், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான பகுதியாக மாற்றியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சியில் கூறினார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த ஜோ பிடன், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியானதாக மாற்றியதற்காக அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார். 

"வெள்ளை மாளிகையையில்  தீபாவளி நிகழ்ச்சி நடத்துகையில், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மாறுபட்ட முறையில் தீபத்தை ஏற்றி, நிர்வாகத்தின் உறுப்பினர்களுடன் இனைந்து கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்  எனவும், முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் தெற்காசிய அமெரிக்கர் - துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தலைமையிலான நடைபெறுவது கூடுதல் சிறப்பு ." அமெரிக்கா முழுவதிலும் உள்ள தெற்காசிய சமூகம் வெளிப்படுத்திய நம்பிக்கை, தைரியம் மற்றும் அன்பிற்கு பிடன் நன்றி தெரிவித்தார்.

இந்த தீப ஒளி திருனாளை உலகம் முழுவதும்  கொண்டாடும்போது, ​​ஜோ பிடன், "இந்த சமூகம் அடிக்கடி பல்வேறு இருள் சூழ்ந்த சம்பவங்களை சந்தித்து வருகிறது.  இதுபோன்ற சூழலில்  நாம் அனைவரும் சமமாக நின்று உறுதியாக போராடுகிறோம்” எனவும் தெரிவித்தார்.

”தீபாவளி என்பது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் இருந்தாலும் சரி, உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது"  என குறிப்பிட்டார்.

"பிரார்த்தனைகள், நடனங்கள், வாணவேடிக்கைகள் மற்றும் இனிப்புகளுடன், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், சமூகத்தின் பெருமையை உணரவும், அனைவரும் எப்போதும் ஒன்றாக தோளோடு தோள் சேர்த்து நிர்க்கவும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று பிடன் கூறினார்.

மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து பேசுகையில்,  "வெள்ளை மாளிகை என்பது மக்களின் வீடு, நம் நாட்டு ஜனாதிபதி, ஒவ்வொரு அமெரிக்கரும் சாதி, மதங்களை கடந்து  தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த இடத்தை உருவாக்கியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேலும் கூறுகையில், ”பிடென் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள பலநூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தீபத்தை ஏற்றி தீமைக்கு எதிரான நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் குறிக்கும் வகையில் தீபாவளியை கொண்டாடிகிறார்கள். "விடாமுயற்சியுடன், நம்பிக்கையுடன், அன்புடன், இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளை மாளிகை என்பது அனைவருக்கும் சொந்தமான வீடு" என்று ஜில் பிடன் கூறினார்.

தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஒரு மங்களகரமான பண்டிகை தீபாவளி.  கண்கவர் விளக்குகள், பட்டாசுகள், தவிர்க்க முடியாத பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறி விழாவை குறிக்கும். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ராமர் வீடு திரும்பியதையும், ராவணனை வென்றதையும் நினைவுகூரும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி "ஒளியின் திருவிழா", மேலும் இது ஐந்து நாட்களுக்கு இடைவிடாமல் அனுசரிக்கப்படுகிறது, சந்திர சூரிய இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாத தொடக்கத்தில் முடிவடைகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஆறு வெவ்வேறு முக்கிய கதைகளுடன் தொடர்புடையது.  வட இந்தியாவில், விநாயகப் பெருமானையும், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும் வழிபடுவது, செழிப்பு மற்றும் செல்வத்தை வரவேற்பதைக் குறிப்பது தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget