மேலும் அறிய

Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?

பாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு இந்தியாவின் பதில் என்ன தெரியுமா.?

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க, அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசிய நிலையில், தற்போது வெளியுறவுத்துறை செயலாளர் களத்தில் இறங்கியுள்ளார். பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசிய அவர், அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருடனும் பேசியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை ஆரம்பித்தது. அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாகிஸ்தானின் தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையே பேர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறும் உலக நாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க உதவலாமா என ஏற்கனவே சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன. ஆனால், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இந்தியா அதற்கு செவிசாய்க்காமல் இருக்கிறது.

பாகிஸ்தானுடன் பேசிய மார்கோ ரூபியோ

போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, போர் பதற்றத்தை தணிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்குவதற்கு, பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்த நிலையில், தற்போது, வெளியுறவுச் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு உதவத் தயார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரிடம் பேசிய மார்கோ ரூபியோ

இந்நிலையில், பாகிஸ்தானுடன் பேசிய பின்னர், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரிடமும் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது, தவறான கணக்கீடுகளை தவிர்க்கும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்கும் வழிகளை கண்டறியுமாறும், இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி தொடர்புகளை மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் ரூபியோ கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளும் போரை தவிர்க்கும் வகையில், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் அளித்த பதில் என்ன.?

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோவுடன் பேசியதாகவும், தகுந்த அளவீடுகளுடனும், பொறுப்புடனுமே இந்தியாவின் அணுகுமுறை இருப்பதாகவும், அது அப்படியே தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்பது தெரிகிறது.

 

தலைப்பு செய்திகள்

''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget