மேலும் அறிய

நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கலவரம் வெடிக்க, நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். ஜூலை மாதம் மத்தியில் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கலவரம் வெடிக்க, நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். ஜூலை மாதம் மத்தியில் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த அவரை அவரது கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் விமான நிலையத்தில் சந்தித்தனர். கோத்தபய ராஜபக்சேவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சேவும் வந்தார்.

அங்கிருந்து அவர் அரசாங்கம் அவருக்காக ஒதுக்கியுள்ள ரகசிய பங்களாவுக்கு சென்றார். அந்த பங்களா பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்த கட்சியினரும் கூட அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்து கமுக்கமாகவே சென்றனர்.

இருப்பினும் விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சே வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் முதலில் மார்ச் 31ஆம் தேதி வீதியில் இறங்கி முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.


நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார்

தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்தனர். ஜூலை 9 ஆம் தேதி அன்று கொழும்பில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம், அவரது அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 

இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தார். பின்னர் மாலத்தீவு தப்பிச் சென்றார். ஒரு நாட்டின் அதிபர் மக்கள் போராட்டத்தால் தப்பிச் சென்றது சர்வதேச கவனம் பெற்றது. மாலத்தீவிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப அங்கிருந்து அவர் சிங்கப்பூர் தப்பிச் சென்றார். கடந்த ஜூலை 14 ம் தேதி ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.   

சிங்கப்பூரில் தங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் அவர் தாய்லாந்திற்கு இடம் பெயர்ந்தார். தாய்லாந்தில் 90 நாட்கள் வரை மட்டுமே தங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில் தான் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அண்மையில் சர்வதேச நிதிய அதிகாரிகள் வந்து ஆலோசனை நடத்தினர். சர்வதேச நிதியம் நடவடிக்கை எடுத்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Embed widget