மேலும் அறிய

நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கலவரம் வெடிக்க, நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். ஜூலை மாதம் மத்தியில் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கலவரம் வெடிக்க, நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். ஜூலை மாதம் மத்தியில் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த அவரை அவரது கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் விமான நிலையத்தில் சந்தித்தனர். கோத்தபய ராஜபக்சேவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சேவும் வந்தார்.

அங்கிருந்து அவர் அரசாங்கம் அவருக்காக ஒதுக்கியுள்ள ரகசிய பங்களாவுக்கு சென்றார். அந்த பங்களா பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்த கட்சியினரும் கூட அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்து கமுக்கமாகவே சென்றனர்.

இருப்பினும் விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சே வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் முதலில் மார்ச் 31ஆம் தேதி வீதியில் இறங்கி முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.


நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார்

தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்தனர். ஜூலை 9 ஆம் தேதி அன்று கொழும்பில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம், அவரது அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 

இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தார். பின்னர் மாலத்தீவு தப்பிச் சென்றார். ஒரு நாட்டின் அதிபர் மக்கள் போராட்டத்தால் தப்பிச் சென்றது சர்வதேச கவனம் பெற்றது. மாலத்தீவிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப அங்கிருந்து அவர் சிங்கப்பூர் தப்பிச் சென்றார். கடந்த ஜூலை 14 ம் தேதி ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.   

சிங்கப்பூரில் தங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் அவர் தாய்லாந்திற்கு இடம் பெயர்ந்தார். தாய்லாந்தில் 90 நாட்கள் வரை மட்டுமே தங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில் தான் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அண்மையில் சர்வதேச நிதிய அதிகாரிகள் வந்து ஆலோசனை நடத்தினர். சர்வதேச நிதியம் நடவடிக்கை எடுத்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget