மேலும் அறிய

Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு

Sri Lanka Parliament: இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டு அதிபர், அனுரா குமார திசநாயகே அறிவித்துள்ளார்.

Sri Lanka Parliament: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரும் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு:

இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கொள்கைகளை கொண்ட அதிபர் அனுரா குமார திசநாயகே, நாடாளுமன்றத்தை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓராண்டிற்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு, வரும் நவம்பர் 14 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு செவ்வாய்கிழமை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், திசநாயகேவின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை முடித்து வரும் நவம்பர் 21ம் தேதி முதல் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடயே, ஹரிணி அமரசூர்யா என்பவரை, இலங்கையின் இடைக்கால பிரதமராக நியமித்து அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்க காரணம் என்ன?

கடனில் மூழ்கியுள்ள நாட்டை அதன் பொருளாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுவிப்பதற்கான , பெரும் பணி புதிய அதிபரின் தோள்களில் உள்ளது. இந்த சூழலில், அவரது தலைமயிலான கூட்டணி, நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இது அவரது கொள்கைகளை செயல்படுத்த சிக்கலாக இருக்கும் என்பதால், நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 5 வருட பதவிக்காலம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பொதுத்தேர்தல், இலங்கையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி:

2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நிதிச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் போனது. இதனால் வெடித்த மக்கள் புரட்சியால், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது பிரச்சாரத்தில், $2.9 பில்லியன் IMF பிணை எடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றத்தை வழங்குவதாக திசநாயகே தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்தார். தற்போதுள்ள நலத்திட்டங்களை விரிவுபடுத்தவும், போராடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், வரிகளைக் குறைப்பதற்கும் பிணை எடுப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் அவர் முன்வைத்துள்ள திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளன. இலங்கையின் முக்கியமான $25 பில்லியன் கடன் மறுசீரமைப்பில் தாமதம் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

நிலையான பொருளாதார வளர்ச்சியை மீளமைத்தல், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளை உறுதிப்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 25% இலங்கையின் 22 மில்லியன் குடிமக்களுக்கு வறுமையைப் போக்குதல் போன்ற பணிகளில் முதலில் கவனம் செலுத்த அனுரா குமார திசநாயகே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget